ETV Bharat / city

கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்னை - உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்

author img

By

Published : May 17, 2022, 2:57 PM IST

Updated : May 17, 2022, 6:34 PM IST

கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Attack
Attack

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிகளுக்கிடையே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் யார் பங்குபெறுவது என்பது தொடர்பாக மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ஒசாமா என்ற மாணவர், பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவரான ரக்கியூப் அகமதுவை கல்லூரி வளாகத்தில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரக்கியூப், தனது நண்பர்களை அழைத்து வந்து கல்லூரி முடிந்து வெளியே வந்த ஒசாமா மற்றும் அப்துல்ரஹீம் ஆகிய இருவரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஒசாமா, அப்துல் ரஹீம் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஒசாமா அளித்தப் புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார், மாணவர் ரக்கியூப் அகமது, முசாதிக், உமர்பரூக் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சென்னை புதுக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

இதையும் படிங்க: புத்தகப்பையில் பட்டாக்கத்தி: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிகளுக்கிடையே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் யார் பங்குபெறுவது என்பது தொடர்பாக மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ஒசாமா என்ற மாணவர், பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவரான ரக்கியூப் அகமதுவை கல்லூரி வளாகத்தில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரக்கியூப், தனது நண்பர்களை அழைத்து வந்து கல்லூரி முடிந்து வெளியே வந்த ஒசாமா மற்றும் அப்துல்ரஹீம் ஆகிய இருவரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஒசாமா, அப்துல் ரஹீம் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஒசாமா அளித்தப் புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார், மாணவர் ரக்கியூப் அகமது, முசாதிக், உமர்பரூக் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சென்னை புதுக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

இதையும் படிங்க: புத்தகப்பையில் பட்டாக்கத்தி: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்

Last Updated : May 17, 2022, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.