ETV Bharat / city

2000 அம்மா மினி கிளினிக் மூடல்- எடப்பாடி, டிடிவி கடும் கண்டனம்!

author img

By

Published : Jan 4, 2022, 2:20 PM IST

தமிழ்நாட்டில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்ற திமுக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2000 அம்மா கிளினிக் மூடப்படும்
2000 அம்மா கிளினிக் மூடப்படும்

சென்னை: தமிழ்நாட்டில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்ற திமுக அரசின் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2,000 மினி கிளினிக்குகள் மூடப்படும் என்று ஈடிவி பாரத் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த நிலையில் திமுக அரசு பதவியேற்ற ஏழு மாதங்களில் அதற்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” எனக் கூறியிருந்தார்.

2000 அம்மா கிளினிக் மூடப்படும்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம்

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் தன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

மக்கள் நலன் கருதி நீடிக்க வேண்டும்

அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கடந்த ஆட்சியில் அவசர கதியில் சரியான ஏற்பாடுகளின்றி அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டபோதே அவற்றிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

2000 அம்மா கிளினிக் மூடப்படும்
டிடிவி ட்விட்டரில் கண்டனம்

அந்தக் கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக் கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்!

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரயில் நிலையத்தில் கொள்ளை சம்பவம்: ஊழியர் நாடகமாடியது அம்பலம்

சென்னை: தமிழ்நாட்டில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்ற திமுக அரசின் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2,000 மினி கிளினிக்குகள் மூடப்படும் என்று ஈடிவி பாரத் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த நிலையில் திமுக அரசு பதவியேற்ற ஏழு மாதங்களில் அதற்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” எனக் கூறியிருந்தார்.

2000 அம்மா கிளினிக் மூடப்படும்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம்

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் தன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

மக்கள் நலன் கருதி நீடிக்க வேண்டும்

அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கடந்த ஆட்சியில் அவசர கதியில் சரியான ஏற்பாடுகளின்றி அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டபோதே அவற்றிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

2000 அம்மா கிளினிக் மூடப்படும்
டிடிவி ட்விட்டரில் கண்டனம்

அந்தக் கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக் கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்!

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரயில் நிலையத்தில் கொள்ளை சம்பவம்: ஊழியர் நாடகமாடியது அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.