ETV Bharat / city

மருத்துவப் படிப்பில் ஆள்மாறாட்டம்; மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க உத்தரவு! - மருத்துவ படிப்பு கலந்தாய்வில் ஆள்மாறாட்டம்

சென்னை: மருத்துவ படிப்பு கலந்தாய்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது உறுதியான நிலையில், அனைத்து மாணவர்களின் விவரங்களையும் சரிபார்க்க மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : Sep 19, 2019, 10:59 PM IST

நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நான்கு பேராசிரியர்களை கொண்ட குழுவினை அமைத்து விசாரணை நடத்தினார்.

இதில் நீட் தேர்வினை மும்பையில் உதய் சூர்யாவிற்கு பதில் வேறு ஒரு மாணவர் தனது புகைப்படத்தை ஒட்டி எழுதியுள்ளார். மேலும் உதய் சூர்யாவின் தந்தை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் வெங்கடேசன் ஆவார். அவரும், மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய மாணவரும் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து உதய் சூர்யா என்ற பெயரில் மும்பை மாணவர் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவ கல்விக்கான வகுப்புகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கிய போது, உதய்சூர்யா மருத்துவ கல்லூரிக்கு சென்று 45 நாட்கள் படித்துள்ளார். அப்பொழுது அந்த மாணவர் அளித்த புகைப்படங்கள் இரண்டும் வெவ்வேறாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த உண்மை வெளியில் வந்துள்ளது.

மேலும் இதில் ஒரு அதிர்ச்சித் தகவலாக ஆள்மாறாட்டம் செய்து இன்னும் சில பேர் நீட் தேர்வினை எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர் உடற்கூறியல் துறைத்தலைவர், உடலியியல், உயிர்வேதியியல், நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்டோர் தலைமையில் சிறப்பு குழுவினை அமைத்து, 2019-20 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவினரின் ஒதுக்கீட்டு ஆணை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சோதனை செய்து சரியான மாணவர்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளாரா என்பதை சரிபார்த்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு செய்தியாளர் சந்திப்பு

மேலும், மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் ஒருவரின் அனுமதி கடிதத்தைக்கூட சரிபார்க்காமல் விடக்கூடாது. விடுமுறையில் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் சேர்ந்த பின்னர் அவரின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என கூறியுனார்.

தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்த சேர்ந்த உதய்சூர்யாவை பிடிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உதய்சூர்யா படிப்பில் தான் தொடரவில்லை என மருத்துவ கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆள்மாறட்டம் செய்து படித்த உதய் சூர்யா கடிதம்
ஆள்மாறட்டம் செய்து படித்த உதய் சூர்யா கடிதம்

நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நான்கு பேராசிரியர்களை கொண்ட குழுவினை அமைத்து விசாரணை நடத்தினார்.

இதில் நீட் தேர்வினை மும்பையில் உதய் சூர்யாவிற்கு பதில் வேறு ஒரு மாணவர் தனது புகைப்படத்தை ஒட்டி எழுதியுள்ளார். மேலும் உதய் சூர்யாவின் தந்தை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் வெங்கடேசன் ஆவார். அவரும், மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய மாணவரும் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து உதய் சூர்யா என்ற பெயரில் மும்பை மாணவர் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவ கல்விக்கான வகுப்புகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கிய போது, உதய்சூர்யா மருத்துவ கல்லூரிக்கு சென்று 45 நாட்கள் படித்துள்ளார். அப்பொழுது அந்த மாணவர் அளித்த புகைப்படங்கள் இரண்டும் வெவ்வேறாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த உண்மை வெளியில் வந்துள்ளது.

மேலும் இதில் ஒரு அதிர்ச்சித் தகவலாக ஆள்மாறாட்டம் செய்து இன்னும் சில பேர் நீட் தேர்வினை எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர் உடற்கூறியல் துறைத்தலைவர், உடலியியல், உயிர்வேதியியல், நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்டோர் தலைமையில் சிறப்பு குழுவினை அமைத்து, 2019-20 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவினரின் ஒதுக்கீட்டு ஆணை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சோதனை செய்து சரியான மாணவர்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளாரா என்பதை சரிபார்த்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு செய்தியாளர் சந்திப்பு

மேலும், மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் ஒருவரின் அனுமதி கடிதத்தைக்கூட சரிபார்க்காமல் விடக்கூடாது. விடுமுறையில் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் சேர்ந்த பின்னர் அவரின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என கூறியுனார்.

தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்த சேர்ந்த உதய்சூர்யாவை பிடிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உதய்சூர்யா படிப்பில் தான் தொடரவில்லை என மருத்துவ கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆள்மாறட்டம் செய்து படித்த உதய் சூர்யா கடிதம்
ஆள்மாறட்டம் செய்து படித்த உதய் சூர்யா கடிதம்
Intro:எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சரிபார்க்க உத்தரவு



Body:எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சரிபார்க்க உத்தரவு


சென்னை,

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் சேர்ந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது உறுதியாகி உள்ள நிலையில் ,மருத்துவ படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் விபரங்களையும் சரிபார்க்க மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.


நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நான்கு பேராசிரியர்களை கொண்ட குழுவினை அமைத்து விசாரணை நடத்தியது. தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் விசாரணையில் ஈடுபட்ட 4 பேராசிரியர்களையும் சென்னை மருத்துவக் கல்வியில் இயக்குனரகத்திற்கு வரவழைத்து மருத்துவக்கல்வி இயக்குனர் நராயணபாபு விசாரணை நடத்தினார்.
அப்பொழுது நீட் தேர்வினை மும்பையில் உதய்சூர்யாவிற்கு பதில் வேறு ஒரு மாணவர் தனது புகைப்படத்தை ஒட்டி எழுதி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் உதய் சூர்யாவின் தந்தை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் வெங்கடேசன் தனது மகன் உதை சூர்யாவிற்கு பதில் மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய மாணவரும், வெங்கடேசனும் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு தேனி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து , உதய் சூர்யா என்ற பெயரில் மும்பை மாணவர் சேர்ந்துள்ளார்.


இந்த நிலையில் மருத்துவ கல்விக்கான வகுப்புகள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்கிய பொழுது உதய்சூர்யா தான் தான் அந்த மாணவர் என கூறி மருத்துவ கல்லூரிக்கு சென்று 45 நாட்கள் படித்துள்ளார். அப்பொழுது அந்த மாணவர் அளித்த புகைப்படங்கள் இரண்டும் வெவ்வேறாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த உண்மை வெளியில் வந்துள்ளது.


மேலும் இதில் ஒரு அதிர்ச்சித் தகவலாக ஆள்மாறாட்டம் செய்து இன்னும் சில பேர் நீட் தேர்வினை எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறில் ஈடுபட்டவர்கள் மருத்துவம் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர் உடற்கூறியல் துறைத்தலைவர்,உடலியியல், உயிர்வேதியியல், நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்டோர் தலைமையில் சிறப்பு குழுவினை அமைக்க வேண்டும்.
இந்த குழுவினர் 2019 -20 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவினரின் ஒதுக்கீட்டு ஆணை, பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சோதனை செய்து சரியான மாணவர் தான் எம்பிபிஎஸ் கோர்ஸில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2019- 20 ஆம் ஆண்டில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் ஒருவரின் அனுமதி கடிதத்தை கூட சரிபார்க்காமல் விடக்கூடாது. விடுமுறையில் சென்றிருந்தாலும் அவர் மீண்டும் சேர்ந்த பின்னர் அவரின் சான்றிதழ்கள் மற்றும் நீட் ஹால் டிக்கெட் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீட்டு ஆணை ஆகியவற்றை சரிபார்த்து அளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.


இந்த நிலையில் தேனி மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்த சேர்ந்த உதய்சூர்யாவை பிடிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


















Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.