ETV Bharat / city

தலைமை நீதிபதி இடமாற்றம்: வழக்கறிஞர்கள் போராட்டம்

author img

By

Published : Sep 10, 2019, 1:01 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை பணியிடமாறுதல் செய்யும் கொலிஜியத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

ramani

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர் நீதிமன்றந்த்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தன்னை மாற்றம் செய்ய வேண்டாம் என்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் கோரிக்கையையும் கொலிஜியம் நிராகரித்தது. இதனால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் ரமாணி அனுப்பிவைத்தார்.

வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்நிலையில், தலைமை நீதிபதியின் மாற்றம் என்பது பழிவாங்கும் செயல், அதனால் தலைமை நீதிபதியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்யும் முடிவை கொலிஜியம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்பட்டன.

வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர் நீதிமன்றந்த்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தன்னை மாற்றம் செய்ய வேண்டாம் என்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் கோரிக்கையையும் கொலிஜியம் நிராகரித்தது. இதனால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் ரமாணி அனுப்பிவைத்தார்.

வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்நிலையில், தலைமை நீதிபதியின் மாற்றம் என்பது பழிவாங்கும் செயல், அதனால் தலைமை நீதிபதியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்யும் முடிவை கொலிஜியம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்பட்டன.

வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்
Intro:Body:சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் கொலீஜியத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர்நீதிமன்றந்த்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தன்னை மாற்றம் செய்ய வேண்டாம் என்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் கோரிக்கையை நிராகரித்து கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதனால், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதியின் மாற்றம் என்பது நீதிமன்ற பழிவாங்கும் செயல், அதனால் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் முடிவை கொலீஜியம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்பட்டன. ஏராளமான வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி வழக்குகளை தள்ளிவைக்க நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.