ETV Bharat / city

கண்டெய்னர் லாரியில் கழுத்து இறுக்கி ஓட்டுநர் உயிரிழப்பு!

சென்னை: அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் சுங்கச்சாவடியில் கார்களை ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரியில் ரிமோட்டை தவறாக இயக்கியபோது கழுத்து இறுகி ஓட்டுநர் உயிரிழந்தார்.

author img

By

Published : Feb 2, 2021, 1:20 PM IST

driver died
driver died

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (35) என்பவர் கண்டெய்னர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்திலிருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.

பின்னர், இரவு அவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு புழல்-தாம்பரம் புறவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தார். இவர், அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி, லாரியின் பக்கவாட்டில் உள்ள கண்டெய்னரில் இரு அடுக்குகளை இயக்கும் ரிமோட்டை சரி பார்த்துள்ளார்.

அப்போது, குனிந்து ரிமோட்டைத் தவறாக இயக்கியபோது ஆனந்த்குமார் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: உந்திபூத்த பெருமாள் கோயிலில் 692ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (35) என்பவர் கண்டெய்னர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்திலிருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.

பின்னர், இரவு அவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு புழல்-தாம்பரம் புறவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தார். இவர், அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி, லாரியின் பக்கவாட்டில் உள்ள கண்டெய்னரில் இரு அடுக்குகளை இயக்கும் ரிமோட்டை சரி பார்த்துள்ளார்.

அப்போது, குனிந்து ரிமோட்டைத் தவறாக இயக்கியபோது ஆனந்த்குமார் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: உந்திபூத்த பெருமாள் கோயிலில் 692ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.