ETV Bharat / city

பூங்காகளை பராமாரிக்காத 69 ஒப்பந்தார்களுக்கு ரூ 1.35 லட்சம் அபராதம்

சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பூங்காகளை பராமாரிக்காத 69 ஒப்பந்தார்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் 1.35 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

author img

By

Published : Jul 12, 2022, 9:13 PM IST

பூங்காகளை பராமாரிக்காத 69 ஒப்பந்தார்களுக்கு 1.35 லட்சம் அபராதம்
பூங்காகளை பராமாரிக்காத 69 ஒப்பந்தார்களுக்கு 1.35 லட்சம் அபராதம்

சென்னை: மாநகராட்சியில் பூங்கா துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் 738 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனியார் வசம் உள்ள பூங்காக்களில் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், நடைபாதை மற்றும் செடி கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சி இன்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்களே புகார்கள் தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவாயிலில் பார்வை நேரம், பணியாளர்களை எண்ணிக்கை அடங்கி விவரங்களை காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

பூங்காக்கள் பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்ட பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் 500 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 600, கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாள் ஒன்றுக்கு 2000 அபராதமாக விதிக்கப்படுகிறது. பூங்காவில் உள்ள மரம் செடி கொடி மற்றும் புல் தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நாலாயிர சதுர அடி அளவில் பூங்காக்களுக்கு 2500 ரூபாயும், 4000 சதுர அடிக்கு மேல் உள்ள பூங்காக்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பூங்கா துறை சார்பாக கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் இம்மாதம் 7 தேதி வரை ஆய்வு செய்யப்பட்டதில் 69 ஒப்பந்ததாரர்கள் குறைவான பணியாளர்களை வைத்து பூங்காக்களை பராமரித்துள்ளனர், அவர்களுக்கு 1,35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தில் கூறிய எண்ணிக்கையில் பணியாளர் இல்லாதவர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதமும், முறையாக பராமரிப்பு இல்லாத ஒப்பந்ததாரர்களுக்கு 1.07 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது எனவும் மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி வழங்குக: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: மாநகராட்சியில் பூங்கா துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் 738 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனியார் வசம் உள்ள பூங்காக்களில் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், நடைபாதை மற்றும் செடி கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சி இன்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்களே புகார்கள் தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவாயிலில் பார்வை நேரம், பணியாளர்களை எண்ணிக்கை அடங்கி விவரங்களை காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

பூங்காக்கள் பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்ட பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் 500 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 600, கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாள் ஒன்றுக்கு 2000 அபராதமாக விதிக்கப்படுகிறது. பூங்காவில் உள்ள மரம் செடி கொடி மற்றும் புல் தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நாலாயிர சதுர அடி அளவில் பூங்காக்களுக்கு 2500 ரூபாயும், 4000 சதுர அடிக்கு மேல் உள்ள பூங்காக்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பூங்கா துறை சார்பாக கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் இம்மாதம் 7 தேதி வரை ஆய்வு செய்யப்பட்டதில் 69 ஒப்பந்ததாரர்கள் குறைவான பணியாளர்களை வைத்து பூங்காக்களை பராமரித்துள்ளனர், அவர்களுக்கு 1,35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தில் கூறிய எண்ணிக்கையில் பணியாளர் இல்லாதவர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதமும், முறையாக பராமரிப்பு இல்லாத ஒப்பந்ததாரர்களுக்கு 1.07 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது எனவும் மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி வழங்குக: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.