ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

author img

By

Published : Nov 2, 2019, 11:55 AM IST

சென்னை: ரூ.1 கோடியே ஒரு லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

1-crore-worth-gold-and-us-dollars-seized-in-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் பயணிகளின் உடைமைகளை சோதித்தனர். அப்போது ஏழு பேர் தங்களின் உள்ளாடைகளில் மறைத்துவைத்து தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சென்னையை சோ்ந்த முகமது அலி(28), அன்சாரி(34), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையது முகமது(34), பாரூக்(43), திருச்சியைச் சோ்ந்த சையத் அப்தகீா்(44) மதுரையைச் சோ்ந்த முகமது அலி(32), சிவகங்கையைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம்(32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.94.2 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 8 பேர் கைது!
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்

இதேபோல், சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்தமுயன்ற தமீம் அன்சாரி (40) என்பவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் வெளிநாட்டு பணத்தையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமீம் அன்சாரி சென்னையை சேர்ந்தவராவார். ஆக ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நடுவானில் விமானத்தில் தீ விபத்து: 159 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைப்பு!

சென்னை விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் பயணிகளின் உடைமைகளை சோதித்தனர். அப்போது ஏழு பேர் தங்களின் உள்ளாடைகளில் மறைத்துவைத்து தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சென்னையை சோ்ந்த முகமது அலி(28), அன்சாரி(34), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையது முகமது(34), பாரூக்(43), திருச்சியைச் சோ்ந்த சையத் அப்தகீா்(44) மதுரையைச் சோ்ந்த முகமது அலி(32), சிவகங்கையைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம்(32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.94.2 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 8 பேர் கைது!
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்

இதேபோல், சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்தமுயன்ற தமீம் அன்சாரி (40) என்பவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் வெளிநாட்டு பணத்தையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமீம் அன்சாரி சென்னையை சேர்ந்தவராவார். ஆக ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நடுவானில் விமானத்தில் தீ விபத்து: 159 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைப்பு!

Intro:சிங்கப்பூா்,துபாய், மலேசியா,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.94.2 லட்சம் மதிப்புடைய 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.Body:சிங்கப்பூா்,துபாய்,
மலேசியா,இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.94.2 லட்சம் மதிப்புடைய 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
தங்கக்கட்டிகளை உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த சென்னையை சோ்ந்த முகமது அலி(28),
அன்சாரி(34),
ராமநாதபுரத்தை சோ்ந்த சையது முகமது(34),
பாரூக்(43),
திருச்சியை சோ்ந்த சையத் அப்தகீா்(44)
மதுரையை சோ்ந்த முகமது அலி(32),
சிவகங்கையை சோ்ந்த அப்துல் ஹக்கீம்(32) ஆகிய 7 பேரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்தமுயன்ற ரூ.7 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா் வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை உள்ளாடைக்குள் மறைத்துவைத்து கடத்தமுயன்ற சென்னையை சோ்ந்த தமீம் அன்சாரி (40) என்பவரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

சென்னை விமானநிலையத்தில் மொத்தம் ரூ. ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புடைய தங்கம்,வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.