ETV Bharat / business

ஆகஸ்ட் 1இல் அமல்., ஏடிஎம் கட்டண உயர்வு ஏன்? ரிசர்வ் வங்கி விளக்கம்

author img

By

Published : Jul 31, 2021, 7:27 PM IST

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம் கட்டணங்கள் உயர்கின்றன.

ATM
ATM

மும்பை: ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை அறிவித்தது.

இந்த மாற்றங்கள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும்.

இந்த மாற்றங்கள் என்ன, மேலும் அவை உங்களுக்கு எப்படி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதை அறிய படிக்கவும்.

பரிமாற்ற கட்டணம் உயர்வு

நிதி பரிவர்த்தனைகளுக்கான பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15 லிருந்து ரூ.17 ஆகவும் (பணப் பரிவர்த்தனை, நிதி பரிமாற்றம் போன்றவை) மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 முதல் ரூ.6 ஆகவும் ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இந்த மாற்றம் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். ஒரு வாடிக்கையாளர் மற்ற வங்கியால் நடத்தப்படும் ஏடிஎம்-ஐ பயன்படுத்தும் போதும் கட்டணம் வசூலிக்கப்படும். இது வங்கியுடன் தொடர்புடையது.

அதேபோல், பரிமாற்றக் கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு, ரொக்கம் மற்றும் ரொக்கமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் (அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் நீங்கலாக) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 லிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ரிசர்வ் வங்கி இந்த மாற்றத்தை ஜனவரி 1, 2022 முதல் செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உள்பட) தொடர்ந்து தகுதியுடையவர்கள் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மெட்ரோ மையங்களில் உள்ள மற்ற வங்கி ஏடிஎம்களிலிருந்தும், மெட்ரோ அல்லாத மையங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும் அவர்களால் செய்ய முடியும்.

வங்கிகள் கட்டணத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது ஏன்?

வங்கிகளில் பரிமாற்றக் கட்டணம் அதிகரிப்பு, ஏடிஎம் பணம் நிரப்புதல் மற்றும் வங்கி ஏடிஎம் பராமரிப்புக்கான செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டணங்கள் அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம் கட்டணங்கள் முழுவதையும் மீளாய்வு செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் ஜூன் 2019 இல் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆகஸ்டில் வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 9 நாள்கள் விடுமுறை

மும்பை: ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை அறிவித்தது.

இந்த மாற்றங்கள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும்.

இந்த மாற்றங்கள் என்ன, மேலும் அவை உங்களுக்கு எப்படி கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதை அறிய படிக்கவும்.

பரிமாற்ற கட்டணம் உயர்வு

நிதி பரிவர்த்தனைகளுக்கான பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15 லிருந்து ரூ.17 ஆகவும் (பணப் பரிவர்த்தனை, நிதி பரிமாற்றம் போன்றவை) மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 முதல் ரூ.6 ஆகவும் ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இந்த மாற்றம் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். ஒரு வாடிக்கையாளர் மற்ற வங்கியால் நடத்தப்படும் ஏடிஎம்-ஐ பயன்படுத்தும் போதும் கட்டணம் வசூலிக்கப்படும். இது வங்கியுடன் தொடர்புடையது.

அதேபோல், பரிமாற்றக் கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு, ரொக்கம் மற்றும் ரொக்கமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் (அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் நீங்கலாக) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 லிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ரிசர்வ் வங்கி இந்த மாற்றத்தை ஜனவரி 1, 2022 முதல் செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உள்பட) தொடர்ந்து தகுதியுடையவர்கள் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மெட்ரோ மையங்களில் உள்ள மற்ற வங்கி ஏடிஎம்களிலிருந்தும், மெட்ரோ அல்லாத மையங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும் அவர்களால் செய்ய முடியும்.

வங்கிகள் கட்டணத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது ஏன்?

வங்கிகளில் பரிமாற்றக் கட்டணம் அதிகரிப்பு, ஏடிஎம் பணம் நிரப்புதல் மற்றும் வங்கி ஏடிஎம் பராமரிப்புக்கான செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டணங்கள் அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம் கட்டணங்கள் முழுவதையும் மீளாய்வு செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் ஜூன் 2019 இல் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆகஸ்டில் வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 9 நாள்கள் விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.