இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் மக்களின் அத்தியாவசியமாக மாறியுள்ளது வாட்ஸ்அப் செயலி. இதன் அம்சங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வண்ணம் ஃபேஸ்புக் நிறுவனம் இலவசமாக வழங்கிவருகிறது. அலுவலகம் சார்ந்த தகவல்கள், தனியுரிமை சார்ந்த தகவல்கள், தொழில் ரீதியான தகவல்கள் ஆகிய அனைத்திற்கும் ஏதுவாக செயல்பட்டுவருகிறது இந்த வாட்ஸ்அப் செயலி.
இத்தருணத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் மூலம் சில ஹேக்கர்கள் நுழைந்துள்ளதாகவும் உடனடியாக அனைத்து பயனர்களும் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பைத் தரவிறக்கம் செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்ட ஃபேஸ்புக் நிறுவனம், “இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் என்.எஸ்.ஓ. என்ற நிறுவனம் ‘பெகாசஸ்’ (pegasus) என்ற ஸ்பைவேர் மென்பொருள் உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கலாம்” என்று குற்றஞ்சாட்டியிருந்தது.
கூடங்குளத்தில் ‘சைபர்’ தாக்குதல் உண்மையே: ஒப்புக்கொண்ட அணுசக்தி கழகம்!
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த வழக்கு நேற்று அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 400 பேரை வாட்ஸ்அப் மூலம் கண்காணித்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
![WhatsApp sues Israels NSO helping spies hack phones around the world வாட்ஸ் ஆப் பயனர்களை குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள் whatsapp hacked by nso group Israeli spyware on WhatsApp spyware target Indian journalists இஸ்ரேல் என்.எஸ்.ஓ நிறுவனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4919661_hacking.jpg)
இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களை எங்களால் வெளியிட முடியாது. ஆனால், ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை மட்டும் கூறமுடியும்" என்று நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் வாட்ஸ்அப் (ஃபேஸ்புக் நிறுவனம்) தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம். தங்கள் கண்டுபிடிப்பான ’பெகாசஸ்’ என்ற மென்பொருளை முறையாக அரசிடம் விற்றதாகக் கூறியுள்ளது.
கூடங்குளம் அணு உலையை ஹேக் செய்தது யார்? - வைகோ கேள்வி
இவர்களின் வாதத்தை தகர்க்கும்விதமாக கனடாவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரேல் என்.எஸ்.ஓ. நிறுவனத்தைச் சேர்ந்த 36 பெகாசஸ் உளவாளிகள், இந்தியா உள்பட 45 நாடுகளில் ஊடுருவியதைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது. அதில் ஐந்து உளவாளிகள் ஆசியாவைத் தீவிரமாகக் கண்காணித்ததாகவும் தெரிவித்துள்ளது.
![WhatsApp sues Israels NSO helping spies hack phones around the world வாட்ஸ் ஆப் பயனர்களை குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள் whatsapp hacked by nso group Israeli spyware on WhatsApp spyware target Indian journalists இஸ்ரேல் என்.எஸ்.ஓ நிறுவனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4919661_nsogroup.jpg)
இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்தின் பதிலைக் கோரி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்பிற்கு கடிதம் எழுதியுள்ளதாக அரசின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், வாட்ஸ்அப் தனது பதிலை நவம்பர் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
'அரசியல் விளம்பரங்கள் இனி கிடையாது' - ட்விட்டர் அதிரடி!
இந்தச் சூழலில் இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பலரைத் தொடர்புகொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், அவர்களை எச்சரித்து அவர்களின் கைப்பேசிகளை மே மாதம் இறுதிவரை அதிநவீன கண்காணிப்பில் வைக்கப்போவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.