ETV Bharat / business

கரோனா எதிரொலி: 350 பேரை வேலையைவிட்டு தூக்கிய ஸ்விகி

author img

By

Published : Jul 28, 2020, 6:45 PM IST

டெல்லி: கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சுமார் 350 பேரை வேலையைவிட்டு நீக்குவதாக ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Swiggy to lay off 350 employees
Swiggy to lay off 350 employees

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியிலும் இந்தியா பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஏராளமான தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, கரோனா அச்சம் காரணமாக ஹோட்டல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சோமேட்டா, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இந்தச் சூழலில், ஸ்விகி நிறுவனம் சுமார் 350 பேரை வேலையைவிட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவுக்கு முன்னர் ஆன்லைன் உணவு டெலிவரி துறை இருந்த சூழலில் தற்போது 50 விழுக்காடு கூட இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வருவாய் இழப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். வேலையிழக்கும் ஊழியர்கள் தற்போதைய சூழலை சமாளிக்க பேக்கேஜ் ஒன்று வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதமும் சுமார் 1,100 பேரை ஸ்விகி நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் பிறகு ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும் ஸ்விகி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அறிமுகமான எஸ்பிஐ கிரெடிட் கார்ட்... பல சலுகைகளை அள்ள தயாராகும் ரயில் பயனர்கள்!

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியிலும் இந்தியா பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஏராளமான தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, கரோனா அச்சம் காரணமாக ஹோட்டல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யவும் மக்கள் அச்சமடைகின்றனர். இதனால் சோமேட்டா, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இந்தச் சூழலில், ஸ்விகி நிறுவனம் சுமார் 350 பேரை வேலையைவிட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவுக்கு முன்னர் ஆன்லைன் உணவு டெலிவரி துறை இருந்த சூழலில் தற்போது 50 விழுக்காடு கூட இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வருவாய் இழப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். வேலையிழக்கும் ஊழியர்கள் தற்போதைய சூழலை சமாளிக்க பேக்கேஜ் ஒன்று வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதமும் சுமார் 1,100 பேரை ஸ்விகி நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் பிறகு ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றும் ஸ்விகி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அறிமுகமான எஸ்பிஐ கிரெடிட் கார்ட்... பல சலுகைகளை அள்ள தயாராகும் ரயில் பயனர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.