2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.4.71 லட்சம் கோடி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டில் அது ரூ.4.78 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையினருக்கான ஓய்வுதியம் போக இந்தத் தொகை ரூ.3.62 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்க சுமார் ரூ.1.35 லட்சம் கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பற்றி எரியப் போகிறதா பெட்ரோல், டீசல் விலை? மத்திய பட்ஜெட்டில் செஸ் வரி விதிப்பு!