ETV Bharat / state

திருப்பத்தூர் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை? உயிரிழந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்! - false treatment

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

திருப்பத்தூர் அருகே தவறான சிகிச்சையால் உயிரிழந்தாக கூறி, தனியார் மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த நபரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், உயிரிழந்தவர்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், உயிரிழந்தவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வெல்க்கல்நாத்தம் அடுத்த வாலூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி சாரதா (45). இவருக்கு இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாரதாவிற்கு (உயிரிழந்தவர்) பைல்ஸ் பிரச்சனை உள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று (புதன்கிழமை) சாரதாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாவும், அப்போது வாயில் நுரை தள்ளி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகினார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக திருப்பத்தூர் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சாரதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஐசியுவில் சிகிச்சைப் பெற்ற பலருக்கு ஒரே சிரஞ்சியில் ஊசி .. அரசு மருத்துவமனை செவிலியர் சஸ்பெண்ட்!

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நாட்றம்பள்ளி உள்ள தனியார் மருத்துவமனையில் சாரதாவின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார், விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். உறவினர்கள் போராட்டம் காரணமாக தனியார் மருத்துவமனையில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உடற்கூறு ஆய்வு பிறகு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வெல்க்கல்நாத்தம் அடுத்த வாலூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி சாரதா (45). இவருக்கு இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாரதாவிற்கு (உயிரிழந்தவர்) பைல்ஸ் பிரச்சனை உள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று (புதன்கிழமை) சாரதாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாவும், அப்போது வாயில் நுரை தள்ளி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகினார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக திருப்பத்தூர் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சாரதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஐசியுவில் சிகிச்சைப் பெற்ற பலருக்கு ஒரே சிரஞ்சியில் ஊசி .. அரசு மருத்துவமனை செவிலியர் சஸ்பெண்ட்!

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நாட்றம்பள்ளி உள்ள தனியார் மருத்துவமனையில் சாரதாவின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார், விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். உறவினர்கள் போராட்டம் காரணமாக தனியார் மருத்துவமனையில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உடற்கூறு ஆய்வு பிறகு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.