ETV Bharat / business

ஷில்பா ஷெட்டிக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்! - அபராதம்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Shilpa Shetty
Shilpa Shetty
author img

By

Published : Jul 29, 2021, 11:27 AM IST

டெல்லி : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா என்ற ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் வியான் இன்டஸ்ட்ரீஸ் (Viaan Industries) என்ற நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் வர்த்தக விதி மீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் நிறுவனத்தில் வர்த்தக விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானது.

இதையடுத்து செபி ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து செபி அளித்துள்ள அறிக்கையில், “வியான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முன்னர் இந்துஸ்தான் பாதுகாப்பு கண்ணாடி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) நிறுவனம் 2013, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், 2015 டிசம்பர் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், செபியின் (உள்வர்த்தக தடை) விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : ‘ஹங்காமா 2’ விழாவில் ஷில்பா ஷெட்டி

டெல்லி : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா என்ற ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் வியான் இன்டஸ்ட்ரீஸ் (Viaan Industries) என்ற நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் வர்த்தக விதி மீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து செபி (இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம்) விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணையில் நிறுவனத்தில் வர்த்தக விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானது.

இதையடுத்து செபி ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து செபி அளித்துள்ள அறிக்கையில், “வியான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முன்னர் இந்துஸ்தான் பாதுகாப்பு கண்ணாடி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்) நிறுவனம் 2013, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், 2015 டிசம்பர் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், செபியின் (உள்வர்த்தக தடை) விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுத்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : ‘ஹங்காமா 2’ விழாவில் ஷில்பா ஷெட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.