ETV Bharat / business

இருநாடுகளுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும்!

author img

By

Published : Mar 18, 2020, 7:18 PM IST

இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்குமிடையேயான கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படுமென இந்தோனேசியா நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும்
இருநாடுகளுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும்

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. இந்தச்சூழலில், சில வாரங்களாக இருநாட்டு உறவில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என இந்தோனேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. டெல்லி வன்முறையில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்த வருத்ததை, இந்தியாவிடம் தெரிவிக்க இருவாரங்களுக்கு முன்பாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்துக்கு அழைப்பாணை அனுப்பியது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம், மேதன் நகரில் உள்ள இந்திய துணைதூதரகம் ஆகியவற்றின் முன்பு எஃப்.பி.ஐ., ஜி.என்.பி.எஃப், பிஏ 212 போன்ற தீவிர இஸ்லாமிய அமைப்புகள் இரண்டு வாரங்களாகப் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்த மூன்று இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையி்ல், “இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான கருவியாக, இந்து குழுக்களால் குடியுரிமைத் திருத்தச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுக்கு இந்தோனேஷியா தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தோனேசிய வட்டாரங்கள் அளித்த விளக்கத்தில், ”இந்தியதூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கான காரணம், ஜகார்த்தாவின் கவலைகளை ஒரு செய்தியாக தெரிவிப்பதற்கு மட்டுமே. மற்றபடி இந்தியா, தமது உள்நாட்டு விஷயங்களில் ஏற்பட்ட பதற்றங்களை தீர்க்கும் வல்லமை படைத்தது என்பதை இந்தோனேஷியா என்றைக்குமே நம்புகிறது” எனத்தெரிவித்தது.

இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அலுவலர், “பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட இதர அமைப்புகள் தங்கள் கவலைகள் குறித்த செய்தியைக் கூறின. அந்த கவலைகள் மட்டுமே அவர்களுக்கு(இந்திய அரசு) எடுத்துக் கூறப்பட்டது. மக்களுக்கு கவலைகள் இருக்கின்றன. ஆனால், இருநாடுகளும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடுகள் என்பதால், இந்த பிரச்னைகளில் இருந்து நாம் மீண்டு வரமுடியும் என்று இந்தோனேஷியன் அரசு நம்புகிறது” எனத்தெரிவித்தார்.

டெல்லி வன்முறையின்போது வலதுசாரி தேசியவாதிகளைக் கொண்ட கும்பல், முகமது ஜூபைர் என்ற இஸ்லாமியர் தலையில் கடுமையாகத் தாக்கியது. அவர் தன்னை விட்டுவிடக் கூறி தரையில் குனிந்தபடி கெஞ்சியபோதும் அவரை விடவில்லை. இவரின் புகைப்படம் வன்முறையின் கோர முகமாக வைரலானது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை அமைதிப்படுத்தினால்தான், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என இந்தோனேஷியா அரசுதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஜகார்த்தாவில் இன்னும் இரண்டு நாட்களில் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என நம்புவதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆயிரத்து 100 காவல்துறையினர் இந்திய தூதரகத்தின் முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபடும். சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம்செய்யப்படும். கடந்த காலங்களில் பாலீஸ்தீன விவகாரம் தொடர்பாக, எந்தொரு வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன்பு தடைவிதிக்கப்படிருந்தது.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள போராட்டங்களில் ஈடுபடாத பெரிய இஸ்லாமிய அமைப்பான எம்.யூ.ஐ உள்ளிட்ட அமைப்புகளும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்த கவலையில் உள்ளன. டெல்லி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என நம்புகிறது. எனினும், இந்த எம்.யூ.ஐ அமைப்பானது, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பி, சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சிறுபான்மையினர்களைப் பாதுகாக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தவேண்டும்” என்று கடுமையாக வலியுறுத்தியது. இந்த அறிக்கையானது. “சி.ஏ.ஏ-வை பாரபட்சமானது” என வரையறுத்துள்ளது.

“ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் (யு.என்.எஸ்.சி-யின்) தீர்மானங்களை இந்திய அரசு மதித்துச் செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது. “இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலை தொடர்ந்து நீடித்தால் புதுடெல்லியுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும்” என்றும் இந்தோனேஷிய இஸ்லாமியர்களுக்கு இந்த அறிக்கை வலியுறுத்தியது.

சில ஆண்டுகளாக இந்தோனேஷியா, ஓஐசியில் (இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு) காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவின் மீது அனுதாபத்தை கொண்டிருந்தது. மசூத் அசார் என்பவரை யு.என்.எஸ்.சி தீவிரவாதப் பட்டியலில் சேர்த்ததை ஆதரித்ததிலும், புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்த முதல் நாடாகவும் இந்தோனேஷியா இருந்தது. இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் முன்னெடுப்புகள் நுட்பமானதாக, அளவிடக்கூடியதாகவே இதுவரை இருந்தது என்று ஜகார்த்தா அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறி உள்ளன.

இந்தவாரம் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதர், எம்.யூ.ஐயின் உறுப்பினராகவுமிருக்கும் இந்தோனேஷிய துணைஅதிபர் மரூஃப் அமீனை சந்திப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆலோசனையின்போது, இருநாடுகளுக்கு இடையேயான முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து பேசுவார்கள். இந்தியா-இந்தோனேஷியா இடையே, 2018ஆம் ஆண்டு அக்டோபரில், பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிலிருந்து, ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அதன்படி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த கட்டபேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இந்தியா முன்னெடுக்கும் என்றும், இருதரப்பு நல்லுறவுகளில் ஏற்பட்டுள்ள மத பதற்றங்களையும் தணிப்பதும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்தோனேசிய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அழிவை ஏற்படுத்தி வருவதால், இந்தியா, இந்தோனேஷியா இடையிலான வெளியுறவு துறை அலுவலகத்தின் ஆலோசனைக் கூட்டத்தின் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷிய அரசியல், பாதுகாப்பு, மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல் ஆகியோரிடையே இரண்டாவது பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, “இந்தோனேஷியாவின் வெளியுறவு கொள்கையின் குறிக்கோளே, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதுதான்” என்று அதிகார வட்டங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சில இந்திய ஊடகங்களில், இந்தோனேஷியாவின் தன்னார்வ அமைப்பான அக்ஸி செபாட் டாங்காப் என்ற அமைப்பு டெல்லி வன்முறைக்கான நிதியை வழங்கியது என்று இந்திய உளவுஅமைப்புகள் கூறியதாக, தகவல் வெளியிட்டன. இதனை இந்தோனேஷிய அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன. இதற்கு, அந்த தன்னார்வ அமைப்பும் மறுப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எவ்வித குற்றச்சாட்டும் வழங்கப்படவில்லை எனவும் இந்தோனேசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்கவேண்டும்!

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. இந்தச்சூழலில், சில வாரங்களாக இருநாட்டு உறவில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என இந்தோனேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. டெல்லி வன்முறையில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்த வருத்ததை, இந்தியாவிடம் தெரிவிக்க இருவாரங்களுக்கு முன்பாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்துக்கு அழைப்பாணை அனுப்பியது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம், மேதன் நகரில் உள்ள இந்திய துணைதூதரகம் ஆகியவற்றின் முன்பு எஃப்.பி.ஐ., ஜி.என்.பி.எஃப், பிஏ 212 போன்ற தீவிர இஸ்லாமிய அமைப்புகள் இரண்டு வாரங்களாகப் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்த மூன்று இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையி்ல், “இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான கருவியாக, இந்து குழுக்களால் குடியுரிமைத் திருத்தச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுக்கு இந்தோனேஷியா தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தோனேசிய வட்டாரங்கள் அளித்த விளக்கத்தில், ”இந்தியதூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கான காரணம், ஜகார்த்தாவின் கவலைகளை ஒரு செய்தியாக தெரிவிப்பதற்கு மட்டுமே. மற்றபடி இந்தியா, தமது உள்நாட்டு விஷயங்களில் ஏற்பட்ட பதற்றங்களை தீர்க்கும் வல்லமை படைத்தது என்பதை இந்தோனேஷியா என்றைக்குமே நம்புகிறது” எனத்தெரிவித்தது.

இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அலுவலர், “பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட இதர அமைப்புகள் தங்கள் கவலைகள் குறித்த செய்தியைக் கூறின. அந்த கவலைகள் மட்டுமே அவர்களுக்கு(இந்திய அரசு) எடுத்துக் கூறப்பட்டது. மக்களுக்கு கவலைகள் இருக்கின்றன. ஆனால், இருநாடுகளும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடுகள் என்பதால், இந்த பிரச்னைகளில் இருந்து நாம் மீண்டு வரமுடியும் என்று இந்தோனேஷியன் அரசு நம்புகிறது” எனத்தெரிவித்தார்.

டெல்லி வன்முறையின்போது வலதுசாரி தேசியவாதிகளைக் கொண்ட கும்பல், முகமது ஜூபைர் என்ற இஸ்லாமியர் தலையில் கடுமையாகத் தாக்கியது. அவர் தன்னை விட்டுவிடக் கூறி தரையில் குனிந்தபடி கெஞ்சியபோதும் அவரை விடவில்லை. இவரின் புகைப்படம் வன்முறையின் கோர முகமாக வைரலானது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களை அமைதிப்படுத்தினால்தான், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என இந்தோனேஷியா அரசுதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஜகார்த்தாவில் இன்னும் இரண்டு நாட்களில் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என நம்புவதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆயிரத்து 100 காவல்துறையினர் இந்திய தூதரகத்தின் முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபடும். சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம்செய்யப்படும். கடந்த காலங்களில் பாலீஸ்தீன விவகாரம் தொடர்பாக, எந்தொரு வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன்பு தடைவிதிக்கப்படிருந்தது.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள போராட்டங்களில் ஈடுபடாத பெரிய இஸ்லாமிய அமைப்பான எம்.யூ.ஐ உள்ளிட்ட அமைப்புகளும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்த கவலையில் உள்ளன. டெல்லி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என நம்புகிறது. எனினும், இந்த எம்.யூ.ஐ அமைப்பானது, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பி, சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப சிறுபான்மையினர்களைப் பாதுகாக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தவேண்டும்” என்று கடுமையாக வலியுறுத்தியது. இந்த அறிக்கையானது. “சி.ஏ.ஏ-வை பாரபட்சமானது” என வரையறுத்துள்ளது.

“ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் (யு.என்.எஸ்.சி-யின்) தீர்மானங்களை இந்திய அரசு மதித்துச் செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது. “இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலை தொடர்ந்து நீடித்தால் புதுடெல்லியுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும்” என்றும் இந்தோனேஷிய இஸ்லாமியர்களுக்கு இந்த அறிக்கை வலியுறுத்தியது.

சில ஆண்டுகளாக இந்தோனேஷியா, ஓஐசியில் (இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு) காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவின் மீது அனுதாபத்தை கொண்டிருந்தது. மசூத் அசார் என்பவரை யு.என்.எஸ்.சி தீவிரவாதப் பட்டியலில் சேர்த்ததை ஆதரித்ததிலும், புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்த முதல் நாடாகவும் இந்தோனேஷியா இருந்தது. இந்தியாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் முன்னெடுப்புகள் நுட்பமானதாக, அளவிடக்கூடியதாகவே இதுவரை இருந்தது என்று ஜகார்த்தா அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறி உள்ளன.

இந்தவாரம் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதர், எம்.யூ.ஐயின் உறுப்பினராகவுமிருக்கும் இந்தோனேஷிய துணைஅதிபர் மரூஃப் அமீனை சந்திப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆலோசனையின்போது, இருநாடுகளுக்கு இடையேயான முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து பேசுவார்கள். இந்தியா-இந்தோனேஷியா இடையே, 2018ஆம் ஆண்டு அக்டோபரில், பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிலிருந்து, ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அதன்படி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த கட்டபேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இந்தியா முன்னெடுக்கும் என்றும், இருதரப்பு நல்லுறவுகளில் ஏற்பட்டுள்ள மத பதற்றங்களையும் தணிப்பதும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்தோனேசிய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அழிவை ஏற்படுத்தி வருவதால், இந்தியா, இந்தோனேஷியா இடையிலான வெளியுறவு துறை அலுவலகத்தின் ஆலோசனைக் கூட்டத்தின் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷிய அரசியல், பாதுகாப்பு, மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல் ஆகியோரிடையே இரண்டாவது பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, “இந்தோனேஷியாவின் வெளியுறவு கொள்கையின் குறிக்கோளே, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதுதான்” என்று அதிகார வட்டங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சில இந்திய ஊடகங்களில், இந்தோனேஷியாவின் தன்னார்வ அமைப்பான அக்ஸி செபாட் டாங்காப் என்ற அமைப்பு டெல்லி வன்முறைக்கான நிதியை வழங்கியது என்று இந்திய உளவுஅமைப்புகள் கூறியதாக, தகவல் வெளியிட்டன. இதனை இந்தோனேஷிய அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன. இதற்கு, அந்த தன்னார்வ அமைப்பும் மறுப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எவ்வித குற்றச்சாட்டும் வழங்கப்படவில்லை எனவும் இந்தோனேசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்கவேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.