ETV Bharat / business

ஊரடங்கால் பிளிப்கார்ட் எடுத்துள்ள முக்கிய முடிவு! - ஸ்பென்சர் நிறுவனம்

அத்தியாவசிய பொருள்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் முறையை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

flipkart
flipkart
author img

By

Published : Apr 14, 2020, 4:05 PM IST

Updated : Apr 14, 2020, 4:38 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகைப் பொருள்கள் உட்பட அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் முறையை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. சோதனை முறையில் இத்திட்டம் தற்போது ஹைதராபாத்தில் மட்டும் செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிளிப்கார்ட் நிர்வாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, "கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு இந்தச் சேவையை சோதனை முறையில் தொடங்கியுள்ளோம்.

பொதுமக்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே உள்ள அத்தியாவசிய பொருள்கள் குறித்து தகவலைத் தெரிந்துகொள்ள ஏதுவாக மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், சரியான நேரத்தில் தேவையான அத்தியாவசிய பொருள்களை வீட்டிற்கே சென்று விநியோகிக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவேந்திர சாவ்லாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க:அரசு உத்தரவாதம் அளித்தால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திசெய்ய தயார்?

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகைப் பொருள்கள் உட்பட அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் முறையை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. சோதனை முறையில் இத்திட்டம் தற்போது ஹைதராபாத்தில் மட்டும் செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிளிப்கார்ட் நிர்வாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, "கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு இந்தச் சேவையை சோதனை முறையில் தொடங்கியுள்ளோம்.

பொதுமக்கள் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே உள்ள அத்தியாவசிய பொருள்கள் குறித்து தகவலைத் தெரிந்துகொள்ள ஏதுவாக மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், சரியான நேரத்தில் தேவையான அத்தியாவசிய பொருள்களை வீட்டிற்கே சென்று விநியோகிக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவேந்திர சாவ்லாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க:அரசு உத்தரவாதம் அளித்தால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திசெய்ய தயார்?

Last Updated : Apr 14, 2020, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.