ETV Bharat / business

'விவசாயிகளுக்கான ஆன்லைன் வர்த்தக இணையதளம் விரைவில் தொடங்கப்படும்' - நபார்டு தலைவர்

author img

By

Published : Jun 24, 2020, 8:01 PM IST

மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ஆத்மநிர்பர் பாரத் அபியான் தொகுப்பின் கீழ், போராடும் விவசாயத் துறைக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. விவசாயச் சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்களைத் தவிர, விவசாயிகளுக்கு நிறுவனக் கடன் ஆதரவை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அரசாங்கம் கூறியுள்ளபடி, இந்த முயற்சியில் நபார்டு வங்கி முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.

NABARD
NABARD

விவசாயச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் வங்கிகளின் பங்கு குறித்து அறிய நபார்டு (விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேசிய வங்கி) தலைவர் சிந்தலகோவிந்த ராஜூவுடன் ஈடிவி செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம்.

1. கோவிட்-19 பொருளாதார தொகுப்பின் ஒரு பகுதியாக நபார்டுக்கு ரூ.30,000 கோடி கூடுதல் மறுநிதியளிப்பு உதவியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி ஆதாரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன?

மத்திய நிதியமைச்சர் தனது பொருளாதார தொகுப்பு அறிவிப்பில், நபார்டு வங்கி நடப்பு ஆண்டில் சாதாரணமாக வழங்கும் ரூ.90 ஆயிரம் கடனுடன் கூட்டுறவு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு பருவக்கால, சம்பா சாகுபடி நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்வதற்குக் கூடுதலாக ரூ.30,000 கோடியை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புப் பணப்புழக்க வசதியின்கீழ் ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஒதுக்கியுள்ள ரூ.25,000 கோடியில், நபார்டு பல்வேறு மட்டங்களில் உள்ள கடன் நிறுவனங்களுக்கு ரூ.22,977 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதிகள் விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்கான வங்கிகளின் வளங்களை அதிகரிக்கும். கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பணப்புழக்க நெருக்கடியைச் சமாளிக்க உதவும்.

2. குத்தகை விவசாயிகள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கலை நபார்டு எவ்வாறு தீர்க்கப் போகிறது?

முறைசாரா குத்தகைதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் குத்தகைதாரர்களுக்கு வங்கிகளால் கடன் கொடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கலைச் சமாளிக்க, குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்களுக்கு இணை இலவசக் கடன் வழங்குவதற்கான ஒரு உத்திசார் தலையீடாகக் கூட்டுப் பொறுப்புக் குழுக்களை (ஜே.எல்.ஜி.) ஊக்குவிப்பதற்கான திட்டத்தை நபார்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

2019-20ஆம் ஆண்டில், 41.80 லட்சம் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், வங்கிகளால் ஊக்குவிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, ஆரம்பத்திலிருந்தே 92.56 லட்சம் கூட்டுப் பொறுப்புக் குழுக்களின் ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவிக்காக ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 853 கோடி வழங்கப்பட்டுள்ளது.

3. நபார்டு அதன் இருப்புநிலைகளை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி, அதன் முக்கிய நோக்கங்களிலிருந்து விலகுகிறது என்று ஒரு விமர்சனம் உள்ளது. உங்கள் கருத்து என்ன?

இருப்புநிலைக் குறிப்பின் வளர்ச்சி, என்னைப் பொறுத்தவரை, தற்செயலாகவும் மக்களுடனான எங்கள் ஈடுபாட்டுடனும் ஒரே நேரத்தில் வளர்ந்துவருகிறது. மேலும், நிதி ரீதியாக வலுவான நிறுவனங்கள் மட்டுமே அவர்கள் நினைத்ததை வழங்க முடியும் என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். எங்கள் இருப்புநிலைக் குழுவின் வலிமைதான் அரசாங்கங்கள் உள்பட எங்கள் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கிறது.

நபார்டு எப்போதும் கடைக்கோடி குடிமகனுக்கும் உதவி செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதாவது, உண்மையான பயனாளிகள் (விவசாயிகள்/ கைவினைக் கலைஞர்கள்/கிராமப்புறத் தொழில் முனைவோர்). இந்தப் பரந்த நாட்டின் அனைத்து எல்லைகளிலும் அதன் வளர்ச்சித் திட்டங்களை எடுப்பதில் ஒரு வலுவான இருப்புநிலை எங்கள் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.

4. பயிர்க் காப்பீடு என்பது நம் விவசாயிகளுக்கு இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்துவருகிறது. இதில் உள்ள சவால்களைச் சமாளிக்க நபார்டு வங்கியின் திட்டங்கள் என்ன?

பல விவசாயிகளுக்குப் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகை கிடைப்பது இல்லை. முக்கியமாக அவர்களிடம் பயிர்க் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் (NAIS) விளம்பரதாரர்களில் ஒருவரான நபார்டு, (அது செலுத்தும் மூலதனத்தில் 30 விழுக்காடு பங்கைக் கொண்டு) பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இந்திய அரசு வகுத்துள்ள கொள்கைகள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

தவிர, பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா போன்ற காப்பீட்டு திட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்கும், காப்பீட்டுத் திட்டங்களின்கீழ் சேர அவர்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு அடிப்படை நிலை அமைப்புகளுடன் நாங்கள் இணைந்துள்ளோம்.

நில சாகுபடி ஆவணங்களை வழங்குவதன் மூலம் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட தகுதியான நிதிச் சேவை போன்ற பயிர்க் காப்பீட்டின் நன்மைகளைக் குத்தகை விவசாயிகள், பங்குதாரர்கள் போன்றவர்களுக்கு விரிவாக்குவது குறித்து பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் நபார்டு ஈடுபட்டுவருகிறது.

5. சமீப காலமாக, சிறந்த விவசாயச் சந்தை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது. இதில் நபார்டு வங்கியின் பங்கு என்ன?

வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது. நபார்டுக்கு நிதியளிப்பதன் மூலம் தொலைதூர பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) இணைவதற்கு வசதியாக சுமார் 10 ஆயிரம் கிராமச் சந்தைகளைக் கிராமப்புற வேளாண் சந்தைகளாக மாற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உதவ முடியும். விவசாயத் துறையைச் சாகுபடியின் செயல்பாட்டிற்கு அப்பால், வணிக அரங்கிற்குக் கொண்டுசெல்வதற்கு முக்கியப் பங்காற்றுவதே சந்தைப்படுத்தலின் முக்கியப் பங்கு.

இதேபோல், உணவு பதப்படுத்தும் நிதியத்தின் கீழ், உணவு மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொழில்களுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நபார்டு ஆதரவளித்துவருகிறது.

6. இந்திய விவசாயத்தில் சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம் உள்ளனர். இந்த விவசாயிகளை நவீனத் தொழில்நுட்பத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது நபார்டு வங்கியின் நோக்கமா?

நபார்டு நாடு முழுவதும் 4,450 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ.) ஊக்குவித்துள்ளது. இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பங்குதாரர்களில் சுமார் 80 விழுக்காடு சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகளை நேரடியாகச் சந்தையுடன் இணைக்க இணைய வர்த்தகத்திற்கான பிரத்யேக இணையத்தை உருவாக்கும் பணியில் நபார்டு ஈடுபட்டுள்ளது.

7. உழவர் உற்பத்தி நிறுவனங்கள் (FPO) கூட்டுறவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும்போது கூட, அவற்றை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் ஏன் முரண்பாடு உள்ளது? இது விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்குவது போன்ற வணிக நடவடிக்கைகளின் சுமையை அதிகரிக்காதா?

உழவர் உற்பத்தி நிறுவனங்களை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்ய நபார்டு வலியுறுத்தவில்லை. நபார்டு ஊக்குவித்த உழவர் உற்பத்தி நிறுவனங்கள் எந்தவொரு சட்ட வடிவத்திலும் தங்களைப் பதிவுசெய்ய உரிமை உண்டு. இருப்பினும், சமீபத்தில், சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (SFAC) செயல்படுத்திய கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் பங்கு மானிய ஆதரவின் நன்மை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்தது.

எனவே, நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தி நிறுவனங்களைப் பதிவுசெய்ய முன்னுரிமை இருந்தது. கூட்டுறவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி.) நிதியளித்த உழவர் உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்குவதற்காக சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பு திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

8. பயிர்க் கடன்களைப் பெறும்போது ஒரு விவசாயி பலவிதமான கட்டணங்களைச் செலுத்துகிறார். இந்தச் சிக்கலை எவ்வாறு தீர்க்கப் போகிறீர்கள்?

தனிநபர் வங்கிகள், தங்கள் கடன் கொள்கையின் ஒருபகுதியாக விவசாயிகளின் கடன் கணக்குகளுக்கு விதிக்கும் கட்டணங்களைத் தீர்மானிக்கின்றன. இருப்பினும், ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டுகள்) மீதான இதரக் கட்டணங்கள் அனைத்தையும் தள்ளுபடிசெய்யுமாறு அனைத்துக் கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!'

விவசாயச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் வங்கிகளின் பங்கு குறித்து அறிய நபார்டு (விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேசிய வங்கி) தலைவர் சிந்தலகோவிந்த ராஜூவுடன் ஈடிவி செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம்.

1. கோவிட்-19 பொருளாதார தொகுப்பின் ஒரு பகுதியாக நபார்டுக்கு ரூ.30,000 கோடி கூடுதல் மறுநிதியளிப்பு உதவியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி ஆதாரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன?

மத்திய நிதியமைச்சர் தனது பொருளாதார தொகுப்பு அறிவிப்பில், நபார்டு வங்கி நடப்பு ஆண்டில் சாதாரணமாக வழங்கும் ரூ.90 ஆயிரம் கடனுடன் கூட்டுறவு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு பருவக்கால, சம்பா சாகுபடி நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்வதற்குக் கூடுதலாக ரூ.30,000 கோடியை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புப் பணப்புழக்க வசதியின்கீழ் ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஒதுக்கியுள்ள ரூ.25,000 கோடியில், நபார்டு பல்வேறு மட்டங்களில் உள்ள கடன் நிறுவனங்களுக்கு ரூ.22,977 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதிகள் விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்கான வங்கிகளின் வளங்களை அதிகரிக்கும். கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பணப்புழக்க நெருக்கடியைச் சமாளிக்க உதவும்.

2. குத்தகை விவசாயிகள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கலை நபார்டு எவ்வாறு தீர்க்கப் போகிறது?

முறைசாரா குத்தகைதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் குத்தகைதாரர்களுக்கு வங்கிகளால் கடன் கொடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கலைச் சமாளிக்க, குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்களுக்கு இணை இலவசக் கடன் வழங்குவதற்கான ஒரு உத்திசார் தலையீடாகக் கூட்டுப் பொறுப்புக் குழுக்களை (ஜே.எல்.ஜி.) ஊக்குவிப்பதற்கான திட்டத்தை நபார்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

2019-20ஆம் ஆண்டில், 41.80 லட்சம் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், வங்கிகளால் ஊக்குவிக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, ஆரம்பத்திலிருந்தே 92.56 லட்சம் கூட்டுப் பொறுப்புக் குழுக்களின் ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவிக்காக ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 853 கோடி வழங்கப்பட்டுள்ளது.

3. நபார்டு அதன் இருப்புநிலைகளை மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி, அதன் முக்கிய நோக்கங்களிலிருந்து விலகுகிறது என்று ஒரு விமர்சனம் உள்ளது. உங்கள் கருத்து என்ன?

இருப்புநிலைக் குறிப்பின் வளர்ச்சி, என்னைப் பொறுத்தவரை, தற்செயலாகவும் மக்களுடனான எங்கள் ஈடுபாட்டுடனும் ஒரே நேரத்தில் வளர்ந்துவருகிறது. மேலும், நிதி ரீதியாக வலுவான நிறுவனங்கள் மட்டுமே அவர்கள் நினைத்ததை வழங்க முடியும் என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். எங்கள் இருப்புநிலைக் குழுவின் வலிமைதான் அரசாங்கங்கள் உள்பட எங்கள் பங்குதாரர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கிறது.

நபார்டு எப்போதும் கடைக்கோடி குடிமகனுக்கும் உதவி செய்வதில் கவனம் செலுத்துகிறது. அதாவது, உண்மையான பயனாளிகள் (விவசாயிகள்/ கைவினைக் கலைஞர்கள்/கிராமப்புறத் தொழில் முனைவோர்). இந்தப் பரந்த நாட்டின் அனைத்து எல்லைகளிலும் அதன் வளர்ச்சித் திட்டங்களை எடுப்பதில் ஒரு வலுவான இருப்புநிலை எங்கள் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.

4. பயிர்க் காப்பீடு என்பது நம் விவசாயிகளுக்கு இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்துவருகிறது. இதில் உள்ள சவால்களைச் சமாளிக்க நபார்டு வங்கியின் திட்டங்கள் என்ன?

பல விவசாயிகளுக்குப் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகை கிடைப்பது இல்லை. முக்கியமாக அவர்களிடம் பயிர்க் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் (NAIS) விளம்பரதாரர்களில் ஒருவரான நபார்டு, (அது செலுத்தும் மூலதனத்தில் 30 விழுக்காடு பங்கைக் கொண்டு) பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இந்திய அரசு வகுத்துள்ள கொள்கைகள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

தவிர, பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா போன்ற காப்பீட்டு திட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்கும், காப்பீட்டுத் திட்டங்களின்கீழ் சேர அவர்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு அடிப்படை நிலை அமைப்புகளுடன் நாங்கள் இணைந்துள்ளோம்.

நில சாகுபடி ஆவணங்களை வழங்குவதன் மூலம் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட தகுதியான நிதிச் சேவை போன்ற பயிர்க் காப்பீட்டின் நன்மைகளைக் குத்தகை விவசாயிகள், பங்குதாரர்கள் போன்றவர்களுக்கு விரிவாக்குவது குறித்து பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் நபார்டு ஈடுபட்டுவருகிறது.

5. சமீப காலமாக, சிறந்த விவசாயச் சந்தை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது. இதில் நபார்டு வங்கியின் பங்கு என்ன?

வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது. நபார்டுக்கு நிதியளிப்பதன் மூலம் தொலைதூர பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) இணைவதற்கு வசதியாக சுமார் 10 ஆயிரம் கிராமச் சந்தைகளைக் கிராமப்புற வேளாண் சந்தைகளாக மாற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உதவ முடியும். விவசாயத் துறையைச் சாகுபடியின் செயல்பாட்டிற்கு அப்பால், வணிக அரங்கிற்குக் கொண்டுசெல்வதற்கு முக்கியப் பங்காற்றுவதே சந்தைப்படுத்தலின் முக்கியப் பங்கு.

இதேபோல், உணவு பதப்படுத்தும் நிதியத்தின் கீழ், உணவு மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொழில்களுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மாநில அரசுகள், மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நபார்டு ஆதரவளித்துவருகிறது.

6. இந்திய விவசாயத்தில் சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம் உள்ளனர். இந்த விவசாயிகளை நவீனத் தொழில்நுட்பத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது நபார்டு வங்கியின் நோக்கமா?

நபார்டு நாடு முழுவதும் 4,450 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ.) ஊக்குவித்துள்ளது. இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பங்குதாரர்களில் சுமார் 80 விழுக்காடு சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகளை நேரடியாகச் சந்தையுடன் இணைக்க இணைய வர்த்தகத்திற்கான பிரத்யேக இணையத்தை உருவாக்கும் பணியில் நபார்டு ஈடுபட்டுள்ளது.

7. உழவர் உற்பத்தி நிறுவனங்கள் (FPO) கூட்டுறவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும்போது கூட, அவற்றை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்வதில் ஏன் முரண்பாடு உள்ளது? இது விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்குவது போன்ற வணிக நடவடிக்கைகளின் சுமையை அதிகரிக்காதா?

உழவர் உற்பத்தி நிறுவனங்களை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்ய நபார்டு வலியுறுத்தவில்லை. நபார்டு ஊக்குவித்த உழவர் உற்பத்தி நிறுவனங்கள் எந்தவொரு சட்ட வடிவத்திலும் தங்களைப் பதிவுசெய்ய உரிமை உண்டு. இருப்பினும், சமீபத்தில், சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (SFAC) செயல்படுத்திய கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் பங்கு மானிய ஆதரவின் நன்மை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்தது.

எனவே, நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தி நிறுவனங்களைப் பதிவுசெய்ய முன்னுரிமை இருந்தது. கூட்டுறவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி.) நிதியளித்த உழவர் உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்குவதற்காக சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பு திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

8. பயிர்க் கடன்களைப் பெறும்போது ஒரு விவசாயி பலவிதமான கட்டணங்களைச் செலுத்துகிறார். இந்தச் சிக்கலை எவ்வாறு தீர்க்கப் போகிறீர்கள்?

தனிநபர் வங்கிகள், தங்கள் கடன் கொள்கையின் ஒருபகுதியாக விவசாயிகளின் கடன் கணக்குகளுக்கு விதிக்கும் கட்டணங்களைத் தீர்மானிக்கின்றன. இருப்பினும், ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டுகள்) மீதான இதரக் கட்டணங்கள் அனைத்தையும் தள்ளுபடிசெய்யுமாறு அனைத்துக் கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'அரசின் 3 வேளாண்மை சீர்த்திருத்தங்களைவிட நிலச்சீர்த்திருத்தமே முக்கியம்...!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.