கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் காதர்பாட்சா. இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட உறவினரை ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் தங்க வைத்துள்ளார். மனநல காப்பகத்தில் இருப்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக, காதர்பாட்சா பலமுறை வாகன இ-பாஸூக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் இ-பாஸ் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது நண்பர்கள் மூலம் போலி இ-பாஸ் தயாரித்துள்ளார். போலி இ-பாஸ் மூலம் கர்நாடகாவில் இருந்து காரில், தனது உறவினர்கள் உட்பட நான்கு பேரை அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளார்.