ETV Bharat / briefs

இளைஞரை வெட்டி படுகொலை செய்தவருக்கு காவல் துறையினர் வலைவீச்சு! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் இளைஞரை வெட்டி படுகொலை செய்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஜோசன்
ஜோசன்
author img

By

Published : Jun 26, 2020, 9:00 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசன் (எ) யூசுப்(45). இவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இவர் நேற்று மதியம் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் வழிமறித்தார்.இதனால், நிலைதடுமாறிய யூஸப் காரை தேசிய நெடுஞ்சாலை நடுவிலுள்ள கட்டையில் மோதி நிறுத்தியுள்ளார்.

பின்னர், அவர் யூசுப்பை பயங்கர ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த யூசுப் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பயந்து காரை விட்டு இறங்கி, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரத்தம் சிந்த சிந்த ஓடியுள்ளார்.

இருப்பினும் அந்த மர்ம நபர் யூசப்பை பின் தொடர்ந்து சாலையின் நடுவே வைத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார் .

இதனால் பலத்த காயமடைந்த யூசுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வல்லம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

முதல்கட்ட விசாரணையில் யூசுப் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்ததும் , அப்போது இலங்கையைச் சேர்ந்த அசிலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது . மேலும் , இருவரும் தஞ்சாவூர் அரு காயிதேமில்லத் நகரில் வசித்துவந்தபோது தகராறு ஏற்பட்டு , காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது .

மேலும் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளாகச் சொத்து பிரச்னை இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. எனவே இதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசன் (எ) யூசுப்(45). இவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறியதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இவர் நேற்று மதியம் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் வழிமறித்தார்.இதனால், நிலைதடுமாறிய யூஸப் காரை தேசிய நெடுஞ்சாலை நடுவிலுள்ள கட்டையில் மோதி நிறுத்தியுள்ளார்.

பின்னர், அவர் யூசுப்பை பயங்கர ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால் பதற்றமடைந்த யூசுப் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பயந்து காரை விட்டு இறங்கி, சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரத்தம் சிந்த சிந்த ஓடியுள்ளார்.

இருப்பினும் அந்த மர்ம நபர் யூசப்பை பின் தொடர்ந்து சாலையின் நடுவே வைத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார் .

இதனால் பலத்த காயமடைந்த யூசுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வல்லம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

முதல்கட்ட விசாரணையில் யூசுப் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்ததும் , அப்போது இலங்கையைச் சேர்ந்த அசிலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது . மேலும் , இருவரும் தஞ்சாவூர் அரு காயிதேமில்லத் நகரில் வசித்துவந்தபோது தகராறு ஏற்பட்டு , காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது .

மேலும் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளாகச் சொத்து பிரச்னை இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. எனவே இதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.