ETV Bharat / briefs

விருதுநகரில் கரோனா பாதிப்பால் கிராம உதவியாளர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 3, 2020, 2:54 PM IST

விருதுநகர் : சின்னமூப்பன்பட்டி கிராம உதவியாளர் கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

விருதுநகரில் கரோனா பாதிப்பால் கிராம உதவியாளர் உயிரிழப்பு!
விருதுநகரில் கரோனா பாதிப்பால் கிராம உதவியாளர் உயிரிழப்பு!

கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் வேலைக்காக சென்றவர்கள் ஊரடங்கு தளர்வை அடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் அதன் பரவல் வேகமடைந்து வருகிறது.

அந்த வகையில், விருதுநகரை அடுத்துள்ள சின்னமூப்பன்பட்டியில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த முருகேசன்(59) என்பவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசன் இன்று (ஜூலை 3) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கிராம உதவியாளர் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 பரவலால் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 614 பேர் பாதிக்கப்பட்டும், 8 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் அண்டை மாநிலங்களில் வேலைக்காக சென்றவர்கள் ஊரடங்கு தளர்வை அடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் அதன் பரவல் வேகமடைந்து வருகிறது.

அந்த வகையில், விருதுநகரை அடுத்துள்ள சின்னமூப்பன்பட்டியில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த முருகேசன்(59) என்பவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகேசன் இன்று (ஜூலை 3) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்போது அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கிராம உதவியாளர் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 பரவலால் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 614 பேர் பாதிக்கப்பட்டும், 8 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.