ETV Bharat / briefs

'1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை'

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில்  திருத்தங்கள் தேவை என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Jun 17, 2020, 11:23 AM IST

Vaiko urges 1018 town places name need changes
Vaiko urges 1018 town places name need changes

2018-19 ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், "தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கென ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ஊர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு, ஜூன் 10ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் அறிஞர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள்செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான திருத்தங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.

ஆனால், சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என இந்த ஆணை வரையறுக்கவில்லை; தெளிவுப்படுத்தவில்லை.

வேலூர் என்பதை, ஆங்கிலத்தில் ‘Veeloor’ வீலூர் என எழுதியதற்குப் பதிலாக, ‘Vaeloor’ என எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். சில ஊர்களின் பெயர்களில் மட்டும் நெடிலாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இரண்டு ‘AA’ சேர்த்து எழுதப்பட்டு இருக்கின்றது. பல ஊர்களில் அந்த மாற்றம் இல்லை.

வடக்கு அவிநாசிபாளையம் என்பதில், பாளையம் என்ற நெடிலுக்கு இரண்டு ‘AA’ உள்ளது, ஆனால், அவினாசி என்ற நெடிலுக்கு ஒரு ‘A’ தான் உள்ளது. எனவே, அதை அவினசிபாளையம் என்றே வாசிக்க முடியும். திருமுல்லைவாயில் என்பது, ‘Thirumullaivaayal’ என மாற்றம் பெற்றுள்ளது. அதில், ‘த’ என்ற எழுத்திற்கு, ஆங்கிலத்தில் ‘Th’ என எழுதப்பட்டு இருக்கின்றது.

தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள த என்ற எழுத்திற்கும், ‘Th’ என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் த என்ற எழுத்திற்கு ‘Th’ என எழுதி இருக்கின்றார்கள்.

ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், த என்ற எழுத்திற்கு வெறுமனே ‘T’ என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது. வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. எனவே, அதை முன்பு போலவே, டிருநெல்வெலி என்றே வாசிக்க முடியும்.

ஈரோடு என்பதற்கு, இரண்டு ‘EE’ தேவை. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபொழுது, வடமொழியில் எழுதப்பட்டு இருந்த சில ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினார். குறிப்பாக, ‘மாயவரம்’ என்பது மயிலாடுதுறை ஆனது. ஆனால், வேதாரண்யம், திருமறைக்காடு ஆகவில்லை. ‘விருத்தாசலம்’, திருமுதுகுன்றம் ஆகவில்லை. இவையெல்லாம் நீண்டகாலக் கோரிக்கை. இது குறித்து, அரசு ஆணையில் எந்த அறிவிப்பும் இல்லை.

ஆலயங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களையும் தமிழில் எழுத வேண்டும். சோழிங்கநல்லூர் ஆங்கிலத்தில் ‘Solinganalloor’ ஆகி இருக்கின்றது. ஆனால், எழும்பூர், ‘Ezhumboor’ ஆகி இருக்கின்றது. இரண்டு ஊர்களிலும், சிறப்பு ‘ழ’ கரம்தான் இருக்கின்றது. ஏன் இரண்டு விதமாக எழுதுகின்றார்கள்?

‘Ezhumboor’ என்று எழுதினால், அதை ‘எஸ்ஹும்பூர்’ என்றுதான் பிற மொழிக்காரர்கள் வாசிப்பார்கள். ‘எழும்பூர்’ என வாசிக்க மாட்டார்கள். இது மிகப்பெரிய குழப்பம். எனவே, ‘Elumpoor’ என எழுதுவதே சரி.

தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள். அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha’ என்பதை பிறமொழிக்காரர்கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட,‘டமில் நடு’ என்றுதான் சொல்லுகின்றார்கள். அதையும் ‘Thamilnaadu’ என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.

சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற சில குறைகளை, அரசு களைய வேண்டும். அதற்காக, அறிஞர்கள் குழு ஒன்றைத் தெரிவுசெய்து பொறுப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

2018-19 ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், "தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கென ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ஊர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு, ஜூன் 10ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் அறிஞர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள்செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான திருத்தங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.

ஆனால், சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என இந்த ஆணை வரையறுக்கவில்லை; தெளிவுப்படுத்தவில்லை.

வேலூர் என்பதை, ஆங்கிலத்தில் ‘Veeloor’ வீலூர் என எழுதியதற்குப் பதிலாக, ‘Vaeloor’ என எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். சில ஊர்களின் பெயர்களில் மட்டும் நெடிலாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இரண்டு ‘AA’ சேர்த்து எழுதப்பட்டு இருக்கின்றது. பல ஊர்களில் அந்த மாற்றம் இல்லை.

வடக்கு அவிநாசிபாளையம் என்பதில், பாளையம் என்ற நெடிலுக்கு இரண்டு ‘AA’ உள்ளது, ஆனால், அவினாசி என்ற நெடிலுக்கு ஒரு ‘A’ தான் உள்ளது. எனவே, அதை அவினசிபாளையம் என்றே வாசிக்க முடியும். திருமுல்லைவாயில் என்பது, ‘Thirumullaivaayal’ என மாற்றம் பெற்றுள்ளது. அதில், ‘த’ என்ற எழுத்திற்கு, ஆங்கிலத்தில் ‘Th’ என எழுதப்பட்டு இருக்கின்றது.

தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள த என்ற எழுத்திற்கும், ‘Th’ என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் த என்ற எழுத்திற்கு ‘Th’ என எழுதி இருக்கின்றார்கள்.

ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், த என்ற எழுத்திற்கு வெறுமனே ‘T’ என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது. வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. எனவே, அதை முன்பு போலவே, டிருநெல்வெலி என்றே வாசிக்க முடியும்.

ஈரோடு என்பதற்கு, இரண்டு ‘EE’ தேவை. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபொழுது, வடமொழியில் எழுதப்பட்டு இருந்த சில ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினார். குறிப்பாக, ‘மாயவரம்’ என்பது மயிலாடுதுறை ஆனது. ஆனால், வேதாரண்யம், திருமறைக்காடு ஆகவில்லை. ‘விருத்தாசலம்’, திருமுதுகுன்றம் ஆகவில்லை. இவையெல்லாம் நீண்டகாலக் கோரிக்கை. இது குறித்து, அரசு ஆணையில் எந்த அறிவிப்பும் இல்லை.

ஆலயங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களையும் தமிழில் எழுத வேண்டும். சோழிங்கநல்லூர் ஆங்கிலத்தில் ‘Solinganalloor’ ஆகி இருக்கின்றது. ஆனால், எழும்பூர், ‘Ezhumboor’ ஆகி இருக்கின்றது. இரண்டு ஊர்களிலும், சிறப்பு ‘ழ’ கரம்தான் இருக்கின்றது. ஏன் இரண்டு விதமாக எழுதுகின்றார்கள்?

‘Ezhumboor’ என்று எழுதினால், அதை ‘எஸ்ஹும்பூர்’ என்றுதான் பிற மொழிக்காரர்கள் வாசிப்பார்கள். ‘எழும்பூர்’ என வாசிக்க மாட்டார்கள். இது மிகப்பெரிய குழப்பம். எனவே, ‘Elumpoor’ என எழுதுவதே சரி.

தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள். அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha’ என்பதை பிறமொழிக்காரர்கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட,‘டமில் நடு’ என்றுதான் சொல்லுகின்றார்கள். அதையும் ‘Thamilnaadu’ என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.

சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற சில குறைகளை, அரசு களைய வேண்டும். அதற்காக, அறிஞர்கள் குழு ஒன்றைத் தெரிவுசெய்து பொறுப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.