ETV Bharat / briefs

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

author img

By

Published : Jul 22, 2020, 5:10 PM IST

பெரம்பலூர்: மாவட்டத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் சீரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தா குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் சீரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தா குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.