திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளது. அங்குள்ள காப்புக்காட்டுப்பகுதியில் இருந்து இரண்டு மயில்கள் நேற்று காலை பார்சனப்பள்ளி கிராமத்தில் உள்ள முருகர் கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளன.
அப்போது, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயிலினுள் இரண்டு மயில்கள் இருப்பதை கண்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இரு மயில்களையும் மீட்டு ஆம்பூர் சாணக்கனவாய் காப்புக்காட்டுப் பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க: இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!