ETV Bharat / briefs

திருச்சியில் தார்ச்சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர்!

திருச்சி: 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார்ச்சாலைப் பணிகளை அமைச்சர் வளர்மதி பூமி பூஜை நடத்தி தொடங்கிவைத்தார்.

author img

By

Published : Jun 17, 2020, 2:50 PM IST

trichy road work stars with pooja by minister Valarmathi
trichy road work stars with pooja by minister Valarmathi

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வாசன் வேலி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பிரதான சாலையை, புதிதாக தார்ச்சாலையாக அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தார்ச்சாலை அமைக்கும் பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி இன்று பூமி பூஜைபோட்டு தொடங்கிவைத்தார். இதேபோல், வாசன் நகர் 10ஆவது குறுக்குத் தெருவில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், பூமி பூஜைபோட்டு அவர் தொடங்கிவைத்தார்.

trichy road work stars with pooja by minister Valarmathi
தார்ச்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் வளர்மதி

இந்த இரு பணிகளும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழாவில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதவள்ளி, அதிமுக நிர்வாகிகள் கொட்டப்பட்டு செல்வம், சாந்தி, மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஸ்வரன், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் 109ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வாசன் வேலி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பிரதான சாலையை, புதிதாக தார்ச்சாலையாக அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தார்ச்சாலை அமைக்கும் பணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி இன்று பூமி பூஜைபோட்டு தொடங்கிவைத்தார். இதேபோல், வாசன் நகர் 10ஆவது குறுக்குத் தெருவில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், பூமி பூஜைபோட்டு அவர் தொடங்கிவைத்தார்.

trichy road work stars with pooja by minister Valarmathi
தார்ச்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் வளர்மதி

இந்த இரு பணிகளும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழாவில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதவள்ளி, அதிமுக நிர்வாகிகள் கொட்டப்பட்டு செல்வம், சாந்தி, மல்லியம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் விக்னேஸ்வரன், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் 109ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.