ETV Bharat / briefs

ஊரடங்கை மீறியவர்களிடம் இதுவரை சுமார் ரூ.11 கோடி ரூபாய் அபராதம் வசூல்!

author img

By

Published : Jun 11, 2020, 5:56 PM IST

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடமிருந்து அபராதமாக 11 கோடியே 61 லட்சத்து 6 ஆயிரத்து 813 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu police department
Tamilnadu police department

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாளிலிருந்து தடையை மீறியதாக 6 லட்சத்து 15 ஆயிரத்து 938 பேரைக் கைதுசெய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 11 கோடியே 61 லட்சத்து 6 ஆயிரத்து 813 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாளிலிருந்து தடையை மீறியதாக 6 லட்சத்து 15 ஆயிரத்து 938 பேரைக் கைதுசெய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 11 கோடியே 61 லட்சத்து 6 ஆயிரத்து 813 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.