ETV Bharat / briefs

நாளை முதல் கோவையில் சிறப்பு ரயில்கள் ரத்து - kovai Special Train Stop

கோவை: ஊரடங்கு மத்தியில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

kovai Special Train Stop
kovai Special Train Stop
author img

By

Published : Jun 28, 2020, 5:00 PM IST

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டுவந்த கோவை-அரக்கோணம் சிறப்பு ரயில், கோவை-காட்பாடி சிறப்பு ரயில், கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் ஆகியவை நாளை (ஜூன் 29) முதல் அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதிவரை ரத்துசெய்யப்படுகின்றன.

இதேபோல் திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டுவந்த ரயில்களும் ரத்துசெய்யப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கான முழுக் கட்டணத்தை பயண தேதி முதல், ஆறு மாதங்களுக்குள் சிறப்பு கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டுவந்த கோவை-அரக்கோணம் சிறப்பு ரயில், கோவை-காட்பாடி சிறப்பு ரயில், கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் ஆகியவை நாளை (ஜூன் 29) முதல் அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதிவரை ரத்துசெய்யப்படுகின்றன.

இதேபோல் திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டுவந்த ரயில்களும் ரத்துசெய்யப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கான முழுக் கட்டணத்தை பயண தேதி முதல், ஆறு மாதங்களுக்குள் சிறப்பு கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் இருந்து செல்லும் சிறப்பு ரயில்கள் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.