உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முதல் போட்டி நாளை சவுத்ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்காக, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் பும்ராவிடம் ஊக்கு மருந்து சோதனை செய்ப்பட்டது. நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை, ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.
அவரிடம் (சீறுநீரகம் மற்றும் ரத்தப் பரிசோதனை) என இரண்டு கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஐசிசியின் தொடரின்போதும், இந்திய வீரர்களிடம் இருந்து ஊக்கமருத்து சோதனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையிலேயே பும்ராவிடம் ஊக்கமருத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நாளை இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ள நிலையில், பும்ராவின் சோதனை குறித்த அறிக்கை இன்னும் வராமல் இருப்பதால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.