ETV Bharat / briefs

கோவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

author img

By

Published : Aug 3, 2020, 12:47 AM IST

கோயம்புத்தூர்: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 224 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

Increase in the number of people recovering from corona in Coimbatore
கரோனா பாதிப்பு

கோயம்புத்தூரில் இன்று (ஆகஸ்ட் 2) 167 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 230ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 224 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 469ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவர்களை விட குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கோவையில் இதுவே முதல் முறையாகும்.

கோயம்புத்தூரில் இன்று (ஆகஸ்ட் 2) 167 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 230ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 224 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 469ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவர்களை விட குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கோவையில் இதுவே முதல் முறையாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.