ETV Bharat / briefs

கடலூரில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை - போலீசார் விசாரணை - கடலூரில் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

கடலூர்: விருதாச்சலம் அருகே 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Cuddalore 70 shaving gold jewelery robbery - police investigation
author img

By

Published : Jun 21, 2020, 5:19 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள சின்னப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் இரண்டு லட்சம் பணம், வெள்ளி பெருள்களை திருடி சென்றனர். இதேபோல் பக்கத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பா தேவேந்திரன் என்பவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி பெருட்களை திருடி சென்றுள்ளனர்.

மொத்தமாக 70 பவுன் தங்க நகைகள், 3 லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இரு குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள சின்னப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் இரண்டு லட்சம் பணம், வெள்ளி பெருள்களை திருடி சென்றனர். இதேபோல் பக்கத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பா தேவேந்திரன் என்பவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி பெருட்களை திருடி சென்றுள்ளனர்.

மொத்தமாக 70 பவுன் தங்க நகைகள், 3 லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இரு குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.