ETV Bharat / briefs

காசி வழக்கு: 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதி!

கன்னியாகுமரி: பல பெண்களை நம்பவைத்து ஏமாற்றிய வழக்கில், கைதான காசி மற்றும் அவரது கூட்டாளியை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

author img

By

Published : Jun 15, 2020, 4:20 PM IST

காசியை 5நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கன்னியாகுமரி காசி வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் மருத்துவரைத் தொடர்ந்து, பெண் பொறியாளர் ஒருவர் கொடுத்தப் புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர் காசியின் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் வடசேரியில் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவானது.

மேலும், ஒரு கந்துவட்டி வழக்கும் காசி மீது பதிவானது. தொடர் புகார்கள் எழுந்ததால் காசி குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவல் துறையினர் இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது காசி தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பற்றியும், அதற்கு உதவிய நண்பர்கள் பற்றிய விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காசியின் நண்பரான டைசன் ஜினோ என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் உள்ளார். அவரைப் பிடிக்க விமான நிலையங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் காசி வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

முதலில், சிறையில் இருக்கும் காசி, அவரது கூட்டாளியான டைசன் ஜினோ ஆகிய இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகோரி, சிபிசிஐடி காவல் துறையினர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்று (ஜூன் 15) நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், காசி மற்றும் அவரது கூட்டாளி டைசன் ஜினோ ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர், ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து காசி, அவரது கூட்டாளி டைசன் ஜினோ ஆகியோர் இன்று (ஜூன் 15) சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்த விசாரணையின் மூலம் காசியுடன் ரகசியத் தொடர்பில் இருந்த பலரின் அடையாளங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் மருத்துவரைத் தொடர்ந்து, பெண் பொறியாளர் ஒருவர் கொடுத்தப் புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர் காசியின் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் வடசேரியில் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவானது.

மேலும், ஒரு கந்துவட்டி வழக்கும் காசி மீது பதிவானது. தொடர் புகார்கள் எழுந்ததால் காசி குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவல் துறையினர் இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது காசி தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பற்றியும், அதற்கு உதவிய நண்பர்கள் பற்றிய விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காசியின் நண்பரான டைசன் ஜினோ என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் உள்ளார். அவரைப் பிடிக்க விமான நிலையங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் காசி வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

முதலில், சிறையில் இருக்கும் காசி, அவரது கூட்டாளியான டைசன் ஜினோ ஆகிய இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிகோரி, சிபிசிஐடி காவல் துறையினர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்று (ஜூன் 15) நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியான், காசி மற்றும் அவரது கூட்டாளி டைசன் ஜினோ ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர், ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து காசி, அவரது கூட்டாளி டைசன் ஜினோ ஆகியோர் இன்று (ஜூன் 15) சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்த விசாரணையின் மூலம் காசியுடன் ரகசியத் தொடர்பில் இருந்த பலரின் அடையாளங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.