திருச்சியில் 141 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 106 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் ஒரே ஒரு மூதாட்டி மட்டும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் 41 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று (ஜூன்12) புதிதாக ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 48 ஆக எண்ணிகை உயர்ந்தது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஒன்பது பேர் இன்று (ஜூன்-13) குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 39 பேர் கரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.