கரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணி தொடர்பான தடை உத்தரவு அமலில் உள்ளதால், வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில், அந்தந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருச்சி (32), அரியலூர்(6), தருமபுரி(192), ஈரோடு(99), கரூர்(62), நாமக்கல்(59), பெரம்பலூர்(3), புதுக்கோட்டை(8), சேலம்(108), தஞ்சாவூர்(116), திருப்பூர்(57), நீலகிரி(30), கிருஷ்ணகிரி(6) ஆகிய 13 மாவட்டங்களில் தங்கிப் பணிபுரிந்த மொத்தம் 788 தொழிலாளர்களை, திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து சிறப்பு ரயில் மூலம் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் சத்தியபாலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.