விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் வேல்முருகன் (50). இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் பரிந்துரையின்பேரில் வேல்முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேல்முருகனை இன்று கைதுசெய்த காவல் துறையினர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.