ETV Bharat / briefs

கள்ளச்சாராயம் விற்றுவந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது!

author img

By

Published : Jun 28, 2020, 7:39 PM IST

விழுப்புரம்: மரக்காணம் அருகே தொடர்ந்து கள்ளச்சாரயம் காய்ச்சி விற்றுவந்த வியாபாரியை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளச்சாராயம் விற்றுவந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது!
Person arrested for sales liquor illegally

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் வேல்முருகன் (50). இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் பரிந்துரையின்பேரில் வேல்முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேல்முருகனை இன்று கைதுசெய்த காவல் துறையினர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் வேல்முருகன் (50). இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் பரிந்துரையின்பேரில் வேல்முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேல்முருகனை இன்று கைதுசெய்த காவல் துறையினர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.