ETV Bharat / briefs

21 நாள்களுக்குப் பின் பணிக்குத் திரும்பிய மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Jul 31, 2020, 11:06 PM IST

காஞ்சிபுரம்: கரோனா தொற்று சிகிச்சை முடிந்து 21 நாள்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா இன்று பணிக்குத் திரும்பினார்.

21 Days After Collector Ponnaiya Returned To Work
21 Days After Collector Ponnaiya Returned To Work

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர், பொன்னையா. கடந்த 11ஆம் தேதி முதல் தனிமைப் படுத்திக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 15ஆம் தேதி கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின்னர் இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவரது முகாம் அலுவலகத்திற்குத் திரும்பி வந்தார்.

இதையடுத்து, 21 நாள்களுக்குப் பிறகு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பணிக்கு வந்து அவரது பணிகளைத் தொடங்கினார்.

பணிக்குத் திரும்பிய மாவட்ட ஆட்சியருக்கு காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முக பிரியா, சார் ஆட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர், பொன்னையா. கடந்த 11ஆம் தேதி முதல் தனிமைப் படுத்திக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 15ஆம் தேதி கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின்னர் இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவரது முகாம் அலுவலகத்திற்குத் திரும்பி வந்தார்.

இதையடுத்து, 21 நாள்களுக்குப் பிறகு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பணிக்கு வந்து அவரது பணிகளைத் தொடங்கினார்.

பணிக்குத் திரும்பிய மாவட்ட ஆட்சியருக்கு காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முக பிரியா, சார் ஆட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.