ETV Bharat / briefs

கரோனாவால் தள்ளிப்போன பாஃப்டா விருதுகள்! - பாஃப்டா 2021

லண்டன்:கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாஃப்டா விருது வழங்கும் விழா ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bafta awards
Bafta awards
author img

By

Published : Jun 16, 2020, 4:22 PM IST

திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாதமி ஆஃப் ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள். திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் தொடர்கள், நிகழ்ச்சிகள், மேடை வடிவமைப்பு உள்ளிட்டவற்றிக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பாஃப்டா விருதுகள் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கும் விழாவை ஏற்பாட்டாளர்கள் தள்ளிவைத்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக ஏப்ரல் 25ஆம் தேதி பாஃப்டா விருது விழா நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழா குறித்த கூடுதல் தகவல், விரைவில் வெளியிடப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா ஊரடங்கு : 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விழாவை ஒத்திவைக்க ஆலோசனை

திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாதமி ஆஃப் ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள். திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் தொடர்கள், நிகழ்ச்சிகள், மேடை வடிவமைப்பு உள்ளிட்டவற்றிக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பாஃப்டா விருதுகள் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கும் விழாவை ஏற்பாட்டாளர்கள் தள்ளிவைத்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக ஏப்ரல் 25ஆம் தேதி பாஃப்டா விருது விழா நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழா குறித்த கூடுதல் தகவல், விரைவில் வெளியிடப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா ஊரடங்கு : 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விழாவை ஒத்திவைக்க ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.