ETV Bharat / state

சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு - 2 எஸ்ஐ சஸ்பெண்ட்!

author img

By

Published : Jun 23, 2020, 3:21 PM IST

Updated : Jun 23, 2020, 7:57 PM IST

sathankulam custodial death
sathankulam custodial death

15:09 June 23

தூத்துக்குடி: சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்ததையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும், அவரது மகனான பென்னிக்ஸும் இணைந்து செல்போன் கடை நடத்திவந்தனர். கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு முடிந்தபின்னும் கடையை மூடாமல் திறந்துவைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட சாத்தான்குளம் காவல் துறையினர் ஊரடங்கு நேரம் முடிந்ததால் கடையை அடைக்குமாறு ஜெயராஜிடம் கூறியுள்ளனர். ஆனால், கடையை அடைக்காமல் அவர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காவல் துறையினர் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவரம் குறித்து அறிந்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று தனது தந்தையை விடுவிக்குமாறு தகராறு செய்துள்ளார். மேலும் அவர் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவரையும் கைதுசெய்த காவலர்கள் ஊரடங்கு மீறல், காவலர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இச்சூழலில், ஜூன் 22ஆம் தேதி இரவு நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் துடித்துள்ளார். அவரை மீட்டு சிறை வார்டன்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மகன் இறந்த சிறிது நேரத்தில் அவரது தந்தையும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரும் உயிரிழந்தார். மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.  

மேலும் காவலர்கள் கடுமையாகத் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாகவும், அவர்களைக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சாத்தான்குளம் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இச்சம்பவத்திற்கு எதிராக தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசையும் காவல் துறையினரையும் விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இருவரின் உடல்களை 3 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழப்பு: உடற்கூறாய்வை வீடியோ பதிவுசெய்ய உத்தரவு!


 

15:09 June 23

தூத்துக்குடி: சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்ததையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும், அவரது மகனான பென்னிக்ஸும் இணைந்து செல்போன் கடை நடத்திவந்தனர். கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு முடிந்தபின்னும் கடையை மூடாமல் திறந்துவைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட சாத்தான்குளம் காவல் துறையினர் ஊரடங்கு நேரம் முடிந்ததால் கடையை அடைக்குமாறு ஜெயராஜிடம் கூறியுள்ளனர். ஆனால், கடையை அடைக்காமல் அவர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காவல் துறையினர் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவரம் குறித்து அறிந்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று தனது தந்தையை விடுவிக்குமாறு தகராறு செய்துள்ளார். மேலும் அவர் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவரையும் கைதுசெய்த காவலர்கள் ஊரடங்கு மீறல், காவலர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இச்சூழலில், ஜூன் 22ஆம் தேதி இரவு நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் துடித்துள்ளார். அவரை மீட்டு சிறை வார்டன்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மகன் இறந்த சிறிது நேரத்தில் அவரது தந்தையும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரும் உயிரிழந்தார். மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.  

மேலும் காவலர்கள் கடுமையாகத் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாகவும், அவர்களைக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சாத்தான்குளம் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இச்சம்பவத்திற்கு எதிராக தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசையும் காவல் துறையினரையும் விமர்சனம் செய்துவருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இருவரின் உடல்களை 3 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழப்பு: உடற்கூறாய்வை வீடியோ பதிவுசெய்ய உத்தரவு!


 

Last Updated : Jun 23, 2020, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.