ETV Bharat / bharat

மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற மருமகள்...!

author img

By

Published : Sep 28, 2022, 4:46 PM IST

மேற்கு வங்காளத்தில் ஓர் குடும்பத் தகராறில் தன் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் அறுக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற மருமகள்...!
மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற மருமகள்...!

மேற்கு வங்காளம்(மெடினிபூர்): தன் தந்தை வீட்டிற்கு போக வேண்டுமென தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த மனைவி, ஆத்திரமடைந்து தன் மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. மெடினிபூர் மாவட்டத்திலுள்ள பக்ச்சா கிராமத்தில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. ஷிகா ஹைத் எனும் இப்பெண்மணி தன் கணவரிடம் தன் தந்தை வீட்டில் கறிவிருந்து சமைத்திருப்பதாகவும், ஆகையால் அங்கு செல்ல தனக்கு அனுமதி தருமாறும் கேட்டுள்ளார்.

அதற்கு அவரது கணவர் அனுமதி தராததால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓர் கட்டத்தில் தனது கணவரின் குடும்பத்தை ஷிகா ஹைத் கண்டபடி வசைபாடத் தொடங்கியுள்ளார். இதனைக் கேட்டதும் கோபமடைந்த ஷிகாவின் மாமனார், தன் குடும்பத்தை அவதூறாகப் பேச வேண்டாமென ஷிகாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் உச்சகட்ட கோபமடைந்த ஷிகா ஹைத், தனது மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்றுள்ளார். இதனால் வலியில் துடித்த ஷிகாவின் மாமனாரின் குரல்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஷிகா கைத்தை அக்கம்பக்கத்தினர் கயிற்றால் கட்டிவைத்தனர். இருப்பினும், கயிற்றை அவிழ்த்துக் கொண்ட ஷிகா கைத் தனது தந்தை வீட்டிற்கு ஓடினார். இதுகுறித்து ஷிகாவின் மாமியார் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், ஷிகா கைத் நீதிமன்றத்தில் நேற்று(செப்.27) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிகாவிற்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கிய கர்நாடக இளைஞர்

மேற்கு வங்காளம்(மெடினிபூர்): தன் தந்தை வீட்டிற்கு போக வேண்டுமென தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த மனைவி, ஆத்திரமடைந்து தன் மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. மெடினிபூர் மாவட்டத்திலுள்ள பக்ச்சா கிராமத்தில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. ஷிகா ஹைத் எனும் இப்பெண்மணி தன் கணவரிடம் தன் தந்தை வீட்டில் கறிவிருந்து சமைத்திருப்பதாகவும், ஆகையால் அங்கு செல்ல தனக்கு அனுமதி தருமாறும் கேட்டுள்ளார்.

அதற்கு அவரது கணவர் அனுமதி தராததால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓர் கட்டத்தில் தனது கணவரின் குடும்பத்தை ஷிகா ஹைத் கண்டபடி வசைபாடத் தொடங்கியுள்ளார். இதனைக் கேட்டதும் கோபமடைந்த ஷிகாவின் மாமனார், தன் குடும்பத்தை அவதூறாகப் பேச வேண்டாமென ஷிகாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் உச்சகட்ட கோபமடைந்த ஷிகா ஹைத், தனது மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்றுள்ளார். இதனால் வலியில் துடித்த ஷிகாவின் மாமனாரின் குரல்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஷிகா கைத்தை அக்கம்பக்கத்தினர் கயிற்றால் கட்டிவைத்தனர். இருப்பினும், கயிற்றை அவிழ்த்துக் கொண்ட ஷிகா கைத் தனது தந்தை வீட்டிற்கு ஓடினார். இதுகுறித்து ஷிகாவின் மாமியார் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், ஷிகா கைத் நீதிமன்றத்தில் நேற்று(செப்.27) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிகாவிற்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கிய கர்நாடக இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.