ETV Bharat / bharat

பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் ராஜினாமா! - பாலியல் குற்றம்

தன் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா மட்டுமல்ல, அரசியலை விட்டே விலக தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தெரிவித்திருந்த நிலையில் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

Will resign if proven guilty, Karnataka minister  Karnataka minister caught in sex scandal  Karnataka minister  ரமேஷ் ஜர்கிஹோலி  பாலியல் குற்றம்  கர்நாடக நீர்வள அமைச்சர்
Will resign if proven guilty, Karnataka minister Karnataka minister caught in sex scandal Karnataka minister ரமேஷ் ஜர்கிஹோலி பாலியல் குற்றம் கர்நாடக நீர்வள அமைச்சர்
author img

By

Published : Mar 3, 2021, 1:15 PM IST

Updated : Mar 3, 2021, 2:23 PM IST

பெங்களூரு: கர்நாடக நீர்வள அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் அவர் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது கொலை மிரட்டல் விடுத்துவருகிறார் என்று பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். இந்தப் புகாரை திட்டவட்டமாக அமைச்சர் மறுத்தார். இதுதொடர்பாக வெளியான வீடியோவும் போலியானது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் தன் மீதான குற்றஞ்சாட்டுகள் நிரூபிக்கப்படும் தருணத்தில் தான் பதவியை மட்டுமல்ல அரசியலை விட்டே விலகுவேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் அமைச்சர் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அமைச்சர் ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் முதலமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரமேஷ் ஜர்கிஹோலியின் ராஜினாமாவை இரண்டே மணி நேரத்தில் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா ஏற்றுகொண்டார்.

இதையும் படிங்க : பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்!

பெங்களூரு: கர்நாடக நீர்வள அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் அவர் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது கொலை மிரட்டல் விடுத்துவருகிறார் என்று பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். இந்தப் புகாரை திட்டவட்டமாக அமைச்சர் மறுத்தார். இதுதொடர்பாக வெளியான வீடியோவும் போலியானது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் தன் மீதான குற்றஞ்சாட்டுகள் நிரூபிக்கப்படும் தருணத்தில் தான் பதவியை மட்டுமல்ல அரசியலை விட்டே விலகுவேன் என்றும் கூறினார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் அமைச்சர் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அமைச்சர் ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் முதலமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ரமேஷ் ஜர்கிஹோலியின் ராஜினாமாவை இரண்டே மணி நேரத்தில் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா ஏற்றுகொண்டார்.

இதையும் படிங்க : பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்!

Last Updated : Mar 3, 2021, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.