ETV Bharat / bharat

திருமணத்தை மீறிய உறவில் மனைவி... கணவன் கொடுத்த ட்வீஸ்ட்!

author img

By

Published : Jul 24, 2023, 6:37 PM IST

Updated : Jul 24, 2023, 9:30 PM IST

திருமணமாகி 3 ஆண்டுகளில் தனது மனைவி வேறொரு இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்ததும், அந்த காதலனை மனைவியுடன் கணவர் சேர்த்து வைத்த விநோத சம்பவம் ஒடிசாவில் அரங்கேறி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஒடிசா : திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை, ஆண் நண்பருக்கே கணவர் திருமணம் செய்து கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அரங்கேறி உள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதவ பிரதான். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜில்லி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஜில்லிக்கு தனது தூரத்து உறவினரான பரமேஸ்வர பிரதான் என்பவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதன் பிறகு இருவரும் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி எதுவுமே அரியாத கணவர் மாதவ பிரதான் தனது மனைவி காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் அவர்களைத் தேடி வந்தனர். இதனிடையே இருவரையும் மீட்ட போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது இச்சம்பவம் குறித்து விசாரித்த போது தாங்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், பரமேஷ்வர் பிரதானுடன் தான் வாழ விரும்புவதாகவும் ஜில்லி தெரிவித்து உள்ளார்.

மேலும் பரமேஷ்வர் பிரதானையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஜில்லி கூறியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மாதவ பிரதானுக்கு போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆத்திரமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட மாதவ பிரதான், இருவரது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல் நிலையத்தில் கணவன் கண் முன்னே ஜில்லிக்கும், பரமேஷ்வர் பிரதானுக்கும் போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : மகனை கொலை செய்து விட்டு தம்பதியினர் தற்கொலை... ஆட்டிசம் குறைபாட்டால் நேர்ந்த சோகம்!

ஒடிசா : திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை, ஆண் நண்பருக்கே கணவர் திருமணம் செய்து கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அரங்கேறி உள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதவ பிரதான். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜில்லி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஜில்லிக்கு தனது தூரத்து உறவினரான பரமேஸ்வர பிரதான் என்பவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதன் பிறகு இருவரும் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி எதுவுமே அரியாத கணவர் மாதவ பிரதான் தனது மனைவி காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் அவர்களைத் தேடி வந்தனர். இதனிடையே இருவரையும் மீட்ட போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது இச்சம்பவம் குறித்து விசாரித்த போது தாங்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், பரமேஷ்வர் பிரதானுடன் தான் வாழ விரும்புவதாகவும் ஜில்லி தெரிவித்து உள்ளார்.

மேலும் பரமேஷ்வர் பிரதானையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஜில்லி கூறியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மாதவ பிரதானுக்கு போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆத்திரமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட மாதவ பிரதான், இருவரது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல் நிலையத்தில் கணவன் கண் முன்னே ஜில்லிக்கும், பரமேஷ்வர் பிரதானுக்கும் போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : மகனை கொலை செய்து விட்டு தம்பதியினர் தற்கொலை... ஆட்டிசம் குறைபாட்டால் நேர்ந்த சோகம்!

Last Updated : Jul 24, 2023, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.