ETV Bharat / bharat

வரதட்சணைக் கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை

author img

By

Published : Apr 8, 2021, 6:49 PM IST

டெல்லி: உதவி ஜிஎஸ்டி ஆணையரின் மனைவி வரதட்சணைக் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை
வரதட்சணை கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை

டெல்லி, நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் உதவி ஜிஎஸ்டி ஆணையர் அமன் சிங்லா. இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், இவரது மனைவி நேற்று (ஏப்.07) திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து இதுகுறித்த காவல்துறையினரின் விசாரணையில் அப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், அதனால் மனமுடைந்த அப்பெண் விஷம் குடித்ததாகவும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பதினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு

டெல்லி, நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் உதவி ஜிஎஸ்டி ஆணையர் அமன் சிங்லா. இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், இவரது மனைவி நேற்று (ஏப்.07) திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து இதுகுறித்த காவல்துறையினரின் விசாரணையில் அப்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், அதனால் மனமுடைந்த அப்பெண் விஷம் குடித்ததாகவும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பதினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.