ETV Bharat / bharat

காங்கிரஸில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத்தள்ளப்பட்டேன்... குலாம் நபி ஆசாத் பேட்டி...

author img

By

Published : Aug 29, 2022, 3:48 PM IST

காங்கிரஸிலிருந்து தான் வெளியேற பிரதமர் மோடிதான் காரணம் எனக்கூறுவது ஒரு சாக்குபோக்கு என்றும், தன்னை வெளியேறும் நிலைக்குத் தள்ளியது காங்கிரஸார்தான் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

congr
congress

டெல்லி: குலாம் நபி ஆசாத், கடந்த 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், தான் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், "நான் காங்கிரஸிலிருந்து வெளியேற பிரதமர் மோடிதான் காரணம் எனக்கூறுவது ஒரு சாக்குபோக்கு. காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஜி23 கடிதம் எழுதியது முதலே, காங்கிரஸ் தலைமைக்கு என்னுடன் பிரச்னை உள்ளது.

யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. ஜி23 தலைவர்கள் பரிந்துரை செய்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடியை மிகவும் கடுமையானவர் என நான் நினைத்தேன். ஆனால், அவர் மனிதநேயத்தையே காட்டுகிறார்.

காங்கிரஸ் எனது வீடு. எனது வீட்டிலிருந்து வெளியேறும் கட்டாய நிலைக்கு, எனது வீட்டின் உறுப்பினர்களே என்னை தள்ளிவிட்டனர். சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர்களது நலனுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். ராகுல்காந்தியை ஒரு வெற்றிகரமான தலைவராக உருவாக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால், அவர் ஆர்வம் காட்டவில்லை" என்று கூறினார்.

காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளார்.

இதையும் படிங்க:ராகுலின் குழந்தைத் தனம்... வருத்தப்பட்ட குலாம் நபி...

டெல்லி: குலாம் நபி ஆசாத், கடந்த 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், தான் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், "நான் காங்கிரஸிலிருந்து வெளியேற பிரதமர் மோடிதான் காரணம் எனக்கூறுவது ஒரு சாக்குபோக்கு. காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஜி23 கடிதம் எழுதியது முதலே, காங்கிரஸ் தலைமைக்கு என்னுடன் பிரச்னை உள்ளது.

யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. ஜி23 தலைவர்கள் பரிந்துரை செய்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடியை மிகவும் கடுமையானவர் என நான் நினைத்தேன். ஆனால், அவர் மனிதநேயத்தையே காட்டுகிறார்.

காங்கிரஸ் எனது வீடு. எனது வீட்டிலிருந்து வெளியேறும் கட்டாய நிலைக்கு, எனது வீட்டின் உறுப்பினர்களே என்னை தள்ளிவிட்டனர். சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர்களது நலனுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். ராகுல்காந்தியை ஒரு வெற்றிகரமான தலைவராக உருவாக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால், அவர் ஆர்வம் காட்டவில்லை" என்று கூறினார்.

காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளார்.

இதையும் படிங்க:ராகுலின் குழந்தைத் தனம்... வருத்தப்பட்ட குலாம் நபி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.