ETV Bharat / bharat

சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்... மாந்திரீகம் காரணம்..? - சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த மூட்டைக்கு அருகில் மாந்திரீகம் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் கிடந்துள்ளன.

சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்
சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்
author img

By

Published : Nov 5, 2022, 6:39 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள கோழிப்பணையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேபரேலி போலீசார் தரப்பில், ரேபரேலியில் உள்ள ரசூல்பூர் கன்வாரி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடலை முதலில் ராம்குமாரின் மகன் பார்த்துள்ளார். அதன்பின் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றினர். முதல்கட்ட தகவலில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மாந்திரீகம் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் கிடந்தன.

குறிப்பாக, ராம்குமார் பல ஆண்டுகளாக மாந்திரீகம் செய்துவந்ததாக அவரது மனையிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே அந்த சிறுமியின் உறவினர்கள் அளித்தப் புகாரின் பேரில் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளதால் தீவிரமாக தேடிவருகிறோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள கோழிப்பணையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேபரேலி போலீசார் தரப்பில், ரேபரேலியில் உள்ள ரசூல்பூர் கன்வாரி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடலை முதலில் ராம்குமாரின் மகன் பார்த்துள்ளார். அதன்பின் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றினர். முதல்கட்ட தகவலில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மாந்திரீகம் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் கிடந்தன.

குறிப்பாக, ராம்குமார் பல ஆண்டுகளாக மாந்திரீகம் செய்துவந்ததாக அவரது மனையிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே அந்த சிறுமியின் உறவினர்கள் அளித்தப் புகாரின் பேரில் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளதால் தீவிரமாக தேடிவருகிறோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.