ETV Bharat / bharat

Goa election 2022: பாஜக வேட்பாளர் தேர்வுக்கு எதிராக மனோகர் பாரிக்கர் மகன் போர்க்கொடி - மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர்

கோவா மாநிலத்தின் பனாஜி தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உத்பல் பாரிக்கர்
உத்பல் பாரிக்கர்
author img

By

Published : Jan 15, 2022, 10:32 AM IST

கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதிய சக்தியான ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வெற்றி முனைப்புடன் களமிறங்குகின்றன.

தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது. பாஜகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறிய கருத்து மாநில பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவின் பானாஜி தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் நீண்டகாலமாக மூத்த பாஜக தலைவரும், கோவா மாநில முன்னாள் முதலமைச்சருமான மனோகர் பாரிக்கர் வெற்றி வீரராக திகழ்ந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மனோகர் பாரிக்கரின் மரணத்திற்குப் பின், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அடான்சியோ என்பவர் வெற்றிபெற்றார். ஆனால் வெற்றிக்குப் பின் அவர் பாஜகவில் இணைந்துகொண்டார்.

வரும் தேர்தலிலும், பாஜக சார்பில் பனாஜி தொகுதியில் அடான்சியோவே களமிங்குவார் எனக் கூறப்படுகிறார். இதற்கு எதிராக மனோகர் பாரிக்கரின் மகனும் மாநிலத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினருமான உத்பல் பாரிக்கர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது குறித்து உத்பல், " பனாஜி தொகுதியில் போட்டியிட பாலியல் குற்றவாளி, கிரிமினல்களுக்கு எல்லாம் வாய்ப்பளிக்கும் போது என்னை போன்ற தூயவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மனோகர் பாரிக்கரின் மகன் இவ்வாறு நேரடியாக விமர்சனத்தை முன்வைத்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாஜி தொகுதியில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், உத்பல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் - மூன்று வீரர்கள் காயம்

கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதிய சக்தியான ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வெற்றி முனைப்புடன் களமிறங்குகின்றன.

தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது. பாஜகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறிய கருத்து மாநில பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவின் பானாஜி தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் நீண்டகாலமாக மூத்த பாஜக தலைவரும், கோவா மாநில முன்னாள் முதலமைச்சருமான மனோகர் பாரிக்கர் வெற்றி வீரராக திகழ்ந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மனோகர் பாரிக்கரின் மரணத்திற்குப் பின், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அடான்சியோ என்பவர் வெற்றிபெற்றார். ஆனால் வெற்றிக்குப் பின் அவர் பாஜகவில் இணைந்துகொண்டார்.

வரும் தேர்தலிலும், பாஜக சார்பில் பனாஜி தொகுதியில் அடான்சியோவே களமிங்குவார் எனக் கூறப்படுகிறார். இதற்கு எதிராக மனோகர் பாரிக்கரின் மகனும் மாநிலத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினருமான உத்பல் பாரிக்கர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது குறித்து உத்பல், " பனாஜி தொகுதியில் போட்டியிட பாலியல் குற்றவாளி, கிரிமினல்களுக்கு எல்லாம் வாய்ப்பளிக்கும் போது என்னை போன்ற தூயவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மனோகர் பாரிக்கரின் மகன் இவ்வாறு நேரடியாக விமர்சனத்தை முன்வைத்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாஜி தொகுதியில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், உத்பல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் - மூன்று வீரர்கள் காயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.