ETV Bharat / bharat

ஆந்திரா: சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதியதில் 3 யானைகள் பலி

author img

By

Published : Jun 15, 2023, 4:17 PM IST

Updated : Jun 15, 2023, 4:34 PM IST

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பழமனேறு தேசிய நெடுஞ்சாலையில் சாலையினைக் கடக்க முயன்ற யானைகள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் யானைகள் உயிரிழந்தன.

லாரி மோதியதில் 3 யானைகள் பலி
லாரி மோதியதில் 3 யானைகள் பலி

ஆந்திரா மாநிலம்: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்து உள்ளது. மேலும், இந்த யானைக் கூட்டங்கள் இங்கு உள்ள பயிர்கள் மற்றும் தோட்டங்களை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் அதிகமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளனர்.

இருப்பினும், வனத்துறையினர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்கள் பயிர்களைக் காக்க விவசாயிகள் மின் வேலி அமைத்து உள்ளனர். ஆதலால், பயிர்களை மேய வந்த யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவங்களும் அதிகமாக நிகழ்ந்து உள்ளன. தற்போதும் இந்தப் பகுதியில் பழமனேரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! சமூக வலைதளம் மூலம் ஆசைக்காட்டி ரூ.1 கோடி மோசடி!

யானைகள் பலியானதைக் கண்ட அப்பகுதியில் உள்ள மக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் வேகமாக வந்த சரக்கு லாரி மோதி யானைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் விபத்திற்குக் காரணமான சென்னை மாநகருக்கு தக்காளி ஏற்றிச் சென்ற Eicher ட்ரக் என்பதும் தெரிய வந்து உள்ளது. இதனால் அதிகாரிகள் விபத்திற்கு காரணமான ட்ரக்கை பறிமுதல் செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்: ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!

மேலும் விடியற்காலை சந்தைக்கு தக்காளி சுமைகளை ஏற்றிச் செல்லும் நோக்கில் வாகனம் அதி வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இந்தப் பகுதியில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். யானைகளுக்கான வேலி அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், இப்பணி முழுமை பெறாததால் யானைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

லாரியின் அதிவேகத்தால் யானைகள் சாலையோரத்தில் இருந்த தண்டவாளத்தில் மோதி பலியாகி உள்ளது. இந்த சம்பவம் விலங்கினப் பிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: உத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் தாக்கியதில் சிறுமி பலி; மற்றொரு சிறுமி மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரா மாநிலம்: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்து உள்ளது. மேலும், இந்த யானைக் கூட்டங்கள் இங்கு உள்ள பயிர்கள் மற்றும் தோட்டங்களை நாசம் செய்து வந்துள்ளன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் அதிகமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளனர்.

இருப்பினும், வனத்துறையினர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்கள் பயிர்களைக் காக்க விவசாயிகள் மின் வேலி அமைத்து உள்ளனர். ஆதலால், பயிர்களை மேய வந்த யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவங்களும் அதிகமாக நிகழ்ந்து உள்ளன. தற்போதும் இந்தப் பகுதியில் பழமனேரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 3 யானைகள் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது.

இதையும் படிங்க: வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! சமூக வலைதளம் மூலம் ஆசைக்காட்டி ரூ.1 கோடி மோசடி!

யானைகள் பலியானதைக் கண்ட அப்பகுதியில் உள்ள மக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் வேகமாக வந்த சரக்கு லாரி மோதி யானைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் விபத்திற்குக் காரணமான சென்னை மாநகருக்கு தக்காளி ஏற்றிச் சென்ற Eicher ட்ரக் என்பதும் தெரிய வந்து உள்ளது. இதனால் அதிகாரிகள் விபத்திற்கு காரணமான ட்ரக்கை பறிமுதல் செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்: ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!

மேலும் விடியற்காலை சந்தைக்கு தக்காளி சுமைகளை ஏற்றிச் செல்லும் நோக்கில் வாகனம் அதி வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இந்தப் பகுதியில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். யானைகளுக்கான வேலி அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், இப்பணி முழுமை பெறாததால் யானைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.

லாரியின் அதிவேகத்தால் யானைகள் சாலையோரத்தில் இருந்த தண்டவாளத்தில் மோதி பலியாகி உள்ளது. இந்த சம்பவம் விலங்கினப் பிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: உத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் தாக்கியதில் சிறுமி பலி; மற்றொரு சிறுமி மருத்துவமனையில் அனுமதி

Last Updated : Jun 15, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.