ETV Bharat / bharat

பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை... ஜாலியாக சுற்றும் மக்களே உஷார்!

author img

By

Published : Jul 9, 2021, 7:31 PM IST

கரோனா பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை என்றும், யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் எச்சரித்துள்ளார்.

கரோனா
கரோனா

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று (ஜூலை.09) செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், "கரோனா இரண்டாம் அலை முழுமையாக இன்னும் முடிந்தபாடில்லை. மக்கள் மத்தியின் கரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டது என்ற தவறான எண்ணம் வந்துவிட்டதா என்பது தெரியவில்லை.

சுற்றுலாத் தளங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பலர் சுற்றுவதைக் காண முடிகிறது. இது கரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கிறது.

பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.

கேரளா,மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

நாடு முழுவதும் பதிவாகும் தினசரி கரோனா பாதிப்புகளில் 50 விழுக்காடு பாதிப்புகள் கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகிறது. இந்த இரண்டு மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பதிவாகியுள்ள கரோனா பாதிப்புகளில் 80 விழுக்காடு பாதிப்பு, 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 90 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன" எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கரோனா பாதிப்பு சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று (ஜூலை.09) செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், "கரோனா இரண்டாம் அலை முழுமையாக இன்னும் முடிந்தபாடில்லை. மக்கள் மத்தியின் கரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டது என்ற தவறான எண்ணம் வந்துவிட்டதா என்பது தெரியவில்லை.

சுற்றுலாத் தளங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பலர் சுற்றுவதைக் காண முடிகிறது. இது கரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கிறது.

பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.

கேரளா,மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

நாடு முழுவதும் பதிவாகும் தினசரி கரோனா பாதிப்புகளில் 50 விழுக்காடு பாதிப்புகள் கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகிறது. இந்த இரண்டு மாநிலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பதிவாகியுள்ள கரோனா பாதிப்புகளில் 80 விழுக்காடு பாதிப்பு, 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 90 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன" எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கரோனா பாதிப்பு சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.