ETV Bharat / bharat

விசா பெற அறுவை சிகிச்சை... சிக்கிய ஆந்திர கும்பல்... திடுக்கிடும் விசாரணை முடிவுகள்...

author img

By

Published : Sep 2, 2022, 12:50 PM IST

குவைத் நாட்டில் விசா பெறுவதற்காக பல பேருக்கு கைரேகை அறுவை சிகிச்சை செய்து பணம் பெற்றுவந்த ஆந்திர கும்பல் கைது செய்யப்பட்டது.

Rachakonda police arrested Finger print Surgery gang
Rachakonda police arrested Finger print Surgery gang

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்ட சிறப்பு புலனாய்வு குழுவிற்கு, கைரேகை அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பல் அன்னோஜிகூடாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் காட்கேசர் போலீசாரும், சிறப்பு புலனாய்வு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகிக்கக்கூடிய வகையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில் அவர்கள் கஜ்ஜலகோண்டுகரி நாக முனேஸ்வர ரெட்டி, சகபாலா வெங்கட ரமணா, போவில்லா சிவ சங்கர் ரெட்டி, ரெண்டலா ராம கிருஷ்ணா ரெட்டி என்று அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை:

  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள் - 8
  • சிப்லாடின் ஆயின்ட்மெண்ட் (20 கி) -3
  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் டேப் - 3
  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் பிளேட் - 14
  • லிக்னோகைன் ஹைட்ரோகுளோரைடு ஜெல் எனப்படும் மயக்க மருந்து (30 கி) - 2
  • லிக்னோகைன் ஹைட்ரோகுளோரைடு ஊசிக்கான மருந்து (30 மில்லி) - 1
  • தையலுக்கு பயன்படுத்தப்பட உள்ள நூல்கள் - 1 பாக்கெட்
  • அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தும் பஞ்சுகள் - 8 பாக்கெட்டுகள்
  • ஊசி - 8
  • பிளேட் உபயோகப்படுத்த தேவைப்படும் கைப்பிடி - 1
  • சோடியம் குளோரைட் கரைச்சல் (500 மில்லி) - பாட்டில்
  • பெக்டோடைன் கரைச்சல் - 1
  • கத்தரிக்கோல் - 4
  • செல்போன் - 4 (ஓப்போ - 2, விவோ, ரெட்மி)

இந்த வழக்கில் முனேஸ்வர ரெட்டி முதல் குற்றவாளியாகவும், வெங்கட ரமணா 2ஆவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர். சங்கர ரெட்டி, கிருஷ்ண ரெட்டி ஆகியோர் முறையே 3ஆவது, 4ஆவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் குற்றவாளியான முனேஸ்வர ரெட்டி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் CRA (Certificate in Radiological Analysis) என்னும் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை திருப்பதியில் முடித்துள்ளார். 2007ஆம் படிப்பை முடித்த இவர், திருப்பதியிலேயே கிருஷ்ணா டயக்னோஸ்டிக்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது பள்ளிப்பருவ நண்பரும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவருமான வெங்கட ரமாணா மருத்துவமனைகளில் மயக்க மருந்தை கையாளும் பணியாளராக இருந்துள்ளார்.

விசா நடைமுறையில் இருந்த ஓட்டை: அப்போது வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டிக்கு கடாப்பாவை சேர்ந்த ஒருவரின் அறிமுகம் ஏற்படுகிறது. அந்த நபர், குவைத்தில் இருந்து இந்தியா வந்தவர். விசா தேதி முடிந்தும் நீண்ட நாள்களாக அங்கிருந்தால் குவைத் அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.

இந்த நபர் தான் மீண்டும் குவைத் செல்ல கைரேகை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டியிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதற்கென பிரத்யேகமாக ஆட்கள் இருப்பதாகவும் அங்கு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். குவைத்தில் விசா நடைமுறைகளில், பெரியளவில் தொழில்நுட்பம் இல்லாததால் கைரேகையை மாற்றம் செய்து வேறு ஒரு அடையாளத்தில் மீண்டும் விசா பெற்று செல்லாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்தும், இதனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதையும் வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டி இருவரும் அறிந்துகொண்டனர். அறுவை சிகிச்சை குறித்து முழுமையாக அறிந்துகொண்ட பின், குவைத் நண்பர் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு நபர் அறிமுகமாகியுள்ளார்.

ஒரு ஆப்ரேஷனுக்கு ரூ. 25 ஆயிரம்: இதைத் தொடர்ந்து, முனேஸ்வர ரெட்டி, வெங்கட ரமணா சேர்ந்து ராஜஸ்தான் சென்றனர். அங்கு இரண்டு பேருக்கு முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர். இது வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இதற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர்.

தொடர்ந்து நீண்டநாள் கழித்து, அந்த ராஜஸ்தான் நண்பர் மூலம் கேரளாவை சேர்ந்த மற்றொருவர் அறிமுகமாகியுள்ளார். முனேஸ்வர ரெட்டி, வெங்கட ரமணா இருவரும் இந்தாண்டு மே மாதம் கேரளா சென்று 6 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதற்காக, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் சொந்த கிராமத்திலேயே 3 பேரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

ஆதாரிலும் மாற்றம்: இந்த அறுவை சிகிச்சையில் விரல் நுனியில் உள்ள தோலின் மேல்புறத்தை வெட்டியெடுக்கின்றனர். சில திசுக்களை அகற்றி மீண்டும் அந்த பகுதியை தைத்துவிடுகின்றனர். இந்த காயம் சரியாவதற்கு இரண்டு மாதங்களாகும். சரியான பின்னர், அவர்களின் கைரேகையில் மாற்றம் ஏற்படுகிறது. கைரேகை மாறிய பின், ஆதார் அலுவலகத்தில் புதிய முகவரியில் தங்களை பதிவுசெய்துகொண்டு ஆதார் அட்டையை பெற்றுக்கொள்கின்றனர். குவைத் நாட்டின் விசாவிற்கு விண்ணப்பித்து, அங்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த புதிய கைரேகை ஓராண்டிற்கு மாறாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று கைரேகை அறுவைசிகிச்சை மேற்கொண்டு விசா மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவரவர் நாடுகளுக்கு திருப்பியனுப்பும் பணியை குவைத் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பிகாரில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்ட சிறப்பு புலனாய்வு குழுவிற்கு, கைரேகை அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பல் அன்னோஜிகூடாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் காட்கேசர் போலீசாரும், சிறப்பு புலனாய்வு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகிக்கக்கூடிய வகையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில் அவர்கள் கஜ்ஜலகோண்டுகரி நாக முனேஸ்வர ரெட்டி, சகபாலா வெங்கட ரமணா, போவில்லா சிவ சங்கர் ரெட்டி, ரெண்டலா ராம கிருஷ்ணா ரெட்டி என்று அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை:

  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள் - 8
  • சிப்லாடின் ஆயின்ட்மெண்ட் (20 கி) -3
  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் டேப் - 3
  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் பிளேட் - 14
  • லிக்னோகைன் ஹைட்ரோகுளோரைடு ஜெல் எனப்படும் மயக்க மருந்து (30 கி) - 2
  • லிக்னோகைன் ஹைட்ரோகுளோரைடு ஊசிக்கான மருந்து (30 மில்லி) - 1
  • தையலுக்கு பயன்படுத்தப்பட உள்ள நூல்கள் - 1 பாக்கெட்
  • அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தும் பஞ்சுகள் - 8 பாக்கெட்டுகள்
  • ஊசி - 8
  • பிளேட் உபயோகப்படுத்த தேவைப்படும் கைப்பிடி - 1
  • சோடியம் குளோரைட் கரைச்சல் (500 மில்லி) - பாட்டில்
  • பெக்டோடைன் கரைச்சல் - 1
  • கத்தரிக்கோல் - 4
  • செல்போன் - 4 (ஓப்போ - 2, விவோ, ரெட்மி)

இந்த வழக்கில் முனேஸ்வர ரெட்டி முதல் குற்றவாளியாகவும், வெங்கட ரமணா 2ஆவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர். சங்கர ரெட்டி, கிருஷ்ண ரெட்டி ஆகியோர் முறையே 3ஆவது, 4ஆவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் குற்றவாளியான முனேஸ்வர ரெட்டி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் CRA (Certificate in Radiological Analysis) என்னும் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை திருப்பதியில் முடித்துள்ளார். 2007ஆம் படிப்பை முடித்த இவர், திருப்பதியிலேயே கிருஷ்ணா டயக்னோஸ்டிக்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது பள்ளிப்பருவ நண்பரும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவருமான வெங்கட ரமாணா மருத்துவமனைகளில் மயக்க மருந்தை கையாளும் பணியாளராக இருந்துள்ளார்.

விசா நடைமுறையில் இருந்த ஓட்டை: அப்போது வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டிக்கு கடாப்பாவை சேர்ந்த ஒருவரின் அறிமுகம் ஏற்படுகிறது. அந்த நபர், குவைத்தில் இருந்து இந்தியா வந்தவர். விசா தேதி முடிந்தும் நீண்ட நாள்களாக அங்கிருந்தால் குவைத் அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.

இந்த நபர் தான் மீண்டும் குவைத் செல்ல கைரேகை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டியிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதற்கென பிரத்யேகமாக ஆட்கள் இருப்பதாகவும் அங்கு சென்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். குவைத்தில் விசா நடைமுறைகளில், பெரியளவில் தொழில்நுட்பம் இல்லாததால் கைரேகையை மாற்றம் செய்து வேறு ஒரு அடையாளத்தில் மீண்டும் விசா பெற்று செல்லாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்தும், இதனால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதையும் வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டி இருவரும் அறிந்துகொண்டனர். அறுவை சிகிச்சை குறித்து முழுமையாக அறிந்துகொண்ட பின், குவைத் நண்பர் மூலம் ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு நபர் அறிமுகமாகியுள்ளார்.

ஒரு ஆப்ரேஷனுக்கு ரூ. 25 ஆயிரம்: இதைத் தொடர்ந்து, முனேஸ்வர ரெட்டி, வெங்கட ரமணா சேர்ந்து ராஜஸ்தான் சென்றனர். அங்கு இரண்டு பேருக்கு முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர். இது வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இதற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர்.

தொடர்ந்து நீண்டநாள் கழித்து, அந்த ராஜஸ்தான் நண்பர் மூலம் கேரளாவை சேர்ந்த மற்றொருவர் அறிமுகமாகியுள்ளார். முனேஸ்வர ரெட்டி, வெங்கட ரமணா இருவரும் இந்தாண்டு மே மாதம் கேரளா சென்று 6 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதற்காக, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் சொந்த கிராமத்திலேயே 3 பேரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

ஆதாரிலும் மாற்றம்: இந்த அறுவை சிகிச்சையில் விரல் நுனியில் உள்ள தோலின் மேல்புறத்தை வெட்டியெடுக்கின்றனர். சில திசுக்களை அகற்றி மீண்டும் அந்த பகுதியை தைத்துவிடுகின்றனர். இந்த காயம் சரியாவதற்கு இரண்டு மாதங்களாகும். சரியான பின்னர், அவர்களின் கைரேகையில் மாற்றம் ஏற்படுகிறது. கைரேகை மாறிய பின், ஆதார் அலுவலகத்தில் புதிய முகவரியில் தங்களை பதிவுசெய்துகொண்டு ஆதார் அட்டையை பெற்றுக்கொள்கின்றனர். குவைத் நாட்டின் விசாவிற்கு விண்ணப்பித்து, அங்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த புதிய கைரேகை ஓராண்டிற்கு மாறாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்று கைரேகை அறுவைசிகிச்சை மேற்கொண்டு விசா மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவரவர் நாடுகளுக்கு திருப்பியனுப்பும் பணியை குவைத் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பிகாரில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.