ETV Bharat / bharat

'பொய்களின் பாட்ஷா' அமித்ஷா: கே.டி.ராமா ராவ் விமர்சனம்

author img

By

Published : May 16, 2022, 10:46 AM IST

Updated : May 16, 2022, 11:01 AM IST

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பியதற்காக அமித்ஷாவை 'பொய்களின் பாட்ஷா' என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் விமர்சித்துள்ளார்.

கே.டி.ராமா ராவ்
கே.டி.ராமா ராவ்

தெலங்கானா: மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெலங்கானா மக்களை ஏமாற்றி வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.15) குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் அவரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பியதற்காக 'பொய்களின் பாட்ஷா' என்று விமர்சித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுள்ளதாகவும் கே.டி.ராமா ராவ் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பிரஜா சங்க்ராம யாத்ரா' நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.15) பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, "முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?. அந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். தண்ணீர், நிதி, வேலை உள்ளிட்டவை கொடுப்போம்.

விவசாய கடன்களை தள்ளுபடி, 2 லட்சம் வீடுகள் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் கொடுக்கவில்லை. ஒவ்வொரு பட்டியலினத்தவருக்கும் 4 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் கொடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்கவில்லை.

மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி, அதில் தனது மற்றும் தனது மகன் படத்தை போட்டு மாநில மக்களை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏமாற்றுகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வரும். பாதுகாப்பான மற்றும் வளமான தெலங்கானா மாநிலம் உருவாக பாஜகவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த குற்றஞ்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கே.டி.ராமா ராவ், அமித்ஷாவை 'பொய்களின் பாட்ஷா' என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரம் அருகே உக்ரைன் நாட்டு பேராசிரியர் தவிப்பு

தெலங்கானா: மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெலங்கானா மக்களை ஏமாற்றி வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.15) குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் அவரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) அரசாங்கத்திற்கு எதிராக பொய்களைப் பரப்பியதற்காக 'பொய்களின் பாட்ஷா' என்று விமர்சித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுள்ளதாகவும் கே.டி.ராமா ராவ் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பிரஜா சங்க்ராம யாத்ரா' நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மே.15) பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, "முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?. அந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். தண்ணீர், நிதி, வேலை உள்ளிட்டவை கொடுப்போம்.

விவசாய கடன்களை தள்ளுபடி, 2 லட்சம் வீடுகள் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் கொடுக்கவில்லை. ஒவ்வொரு பட்டியலினத்தவருக்கும் 4 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் கொடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்கவில்லை.

மத்திய அரசு திட்டங்களின் பெயரை மாற்றி, அதில் தனது மற்றும் தனது மகன் படத்தை போட்டு மாநில மக்களை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏமாற்றுகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வரும். பாதுகாப்பான மற்றும் வளமான தெலங்கானா மாநிலம் உருவாக பாஜகவை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த குற்றஞ்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கே.டி.ராமா ராவ், அமித்ஷாவை 'பொய்களின் பாட்ஷா' என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரம் அருகே உக்ரைன் நாட்டு பேராசிரியர் தவிப்பு

Last Updated : May 16, 2022, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.