சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் பற்றிய ராம்சார் மாநாடு என்பது ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 1971 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தான ஈரானில் உள்ள ராம்சார் நகரத்தின் நினைவாக, இது ’ராம்சார் தளம்’ என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 3 சதுப்பு நிலங்கள், மிசோரம் மற்றும் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தலா ஒரு சதுப்பு நிலம் ஆகியவை சர்வதேச ராம்சார் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
இதன்படி தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிளி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
![சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15935338_mangrove.jpg)
மேலும் மிசோரம் மாநிலத்திலுள்ள பாலா சதுப்பு நிலம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாக்யா சாகர் சதுப்பு நிலம் ஆகியவையும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 49 லிருந்து 54 ஆக அதிகரித்துள்ளது.
-
India designates 5 new Ramsar sites, making a total of 54 Ramsar sites in the country. The Ramsar sites have been increased from 49 to 54 Ramsar sites
— PIB India (@PIB_India) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read here: https://t.co/f75NdEBc4K pic.twitter.com/qUcedXv0j3
">India designates 5 new Ramsar sites, making a total of 54 Ramsar sites in the country. The Ramsar sites have been increased from 49 to 54 Ramsar sites
— PIB India (@PIB_India) July 26, 2022
Read here: https://t.co/f75NdEBc4K pic.twitter.com/qUcedXv0j3India designates 5 new Ramsar sites, making a total of 54 Ramsar sites in the country. The Ramsar sites have been increased from 49 to 54 Ramsar sites
— PIB India (@PIB_India) July 26, 2022
Read here: https://t.co/f75NdEBc4K pic.twitter.com/qUcedXv0j3