ETV Bharat / bharat

2022 Sabarimala Makara Jyothi: சபரிமலையில் மகரஜோதியை தரிசனம் செய்த பக்தர்கள்!

2022 Sabarimala Makara Jyothi: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் ஆகியவை இன்று நடைபெற்றன.

author img

By

Published : Jan 14, 2022, 10:58 PM IST

சபரிமலை
சபரிமலை

பத்தனம்திட்டா: 2022 Sabarimala Makara Jyothi: இன்று ஜனவரி 14ஆம் தேதி, மாலை உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்குப் பூஜை வெகு விமரிசையாக, பக்தர்களின் ஐயப்ப கோஷத்துடன் கொண்டாடப்பட்டது.

முன்னதாக, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் (தங்க ஆபரணங்கள்) திருவாபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் சாஸ்தா கோயிலிலிருந்து ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாகக் கொண்டுவரப்பட்டன.

பந்தள அரண்மனையிலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனியில் இன்று மதியம் 12.29 மணியளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெற்றது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.

மகரஜோதி தரிசனம்

பின், 2:29 மணிக்கு திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை சரங்குத்தி வந்தடைந்து பின், அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அலுவலர்களின் வரவேற்புக்குப் பின் சுவாமி சன்னிதானத்துக்கு முன்பு இருக்கும் 18 படிகளின் வழியாக மாலை 6:25க்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனைக் காட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாகச் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சி தந்தார். மகர ஜோதியை அங்குக் கூடியிருந்த திரளான ஐயப்ப பக்தர்கள் ஆர்வத்துடன் வணங்கினர்.

மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி

பொன்னம்பல பேட்டில் அடுத்து மூன்று முறை தெரிந்த மகரஜோதியினை பக்தர்கள் சுவாமியே சரணம்! ஐயப்பா சரணம்! என்ற பக்தி கோஷங்களுடன் கண்டு மகிழ்ந்தனர்

முன்னதாக, சபரிமலை மகர ஜோதியொட்டி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காகச் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களிலிருந்து மகர ஜோதியைத் தரிசனம் செய்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்ற மகரஜோதி தரிசனத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை படிங்க: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

பத்தனம்திட்டா: 2022 Sabarimala Makara Jyothi: இன்று ஜனவரி 14ஆம் தேதி, மாலை உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்குப் பூஜை வெகு விமரிசையாக, பக்தர்களின் ஐயப்ப கோஷத்துடன் கொண்டாடப்பட்டது.

முன்னதாக, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் (தங்க ஆபரணங்கள்) திருவாபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் சாஸ்தா கோயிலிலிருந்து ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாகக் கொண்டுவரப்பட்டன.

பந்தள அரண்மனையிலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனியில் இன்று மதியம் 12.29 மணியளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெற்றது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.

மகரஜோதி தரிசனம்

பின், 2:29 மணிக்கு திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை சரங்குத்தி வந்தடைந்து பின், அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அலுவலர்களின் வரவேற்புக்குப் பின் சுவாமி சன்னிதானத்துக்கு முன்பு இருக்கும் 18 படிகளின் வழியாக மாலை 6:25க்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனைக் காட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாகச் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சி தந்தார். மகர ஜோதியை அங்குக் கூடியிருந்த திரளான ஐயப்ப பக்தர்கள் ஆர்வத்துடன் வணங்கினர்.

மூன்று முறை காட்சியளித்த மகரஜோதி

பொன்னம்பல பேட்டில் அடுத்து மூன்று முறை தெரிந்த மகரஜோதியினை பக்தர்கள் சுவாமியே சரணம்! ஐயப்பா சரணம்! என்ற பக்தி கோஷங்களுடன் கண்டு மகிழ்ந்தனர்

முன்னதாக, சபரிமலை மகர ஜோதியொட்டி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காகச் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களிலிருந்து மகர ஜோதியைத் தரிசனம் செய்வதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்ற மகரஜோதி தரிசனத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை படிங்க: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.