ETV Bharat / bharat

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்து: ஆர்எஸ்எஸ் தலைவர் - இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
author img

By

Published : Nov 16, 2022, 7:06 AM IST

அம்பிகாபூர்: நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்து என்றும் அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான் எனவும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். வழிபாட்டு முறைகளை யாரும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் உறுதிபடக் கூறினார். செவ்வாயன்று (நவ. 15) சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் சுயம் சேவகர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வேற்றுமையில் ஒற்றுமையை இந்தியாவின் பழமையான அம்சம்.

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்பதை 1925ஆம் ஆண்டு முதல் தாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம். இந்தியாவை தங்கள் தாய் பூமி என்று கருதுபவர்கள் மற்றும் ஒற்றுமை கலாச்சாரத்துடன் வாழ விரும்புபவர்கள். மதம், ஜாதி, மொழி மற்றும் உணவுப் பழக்கம், சித்தாந்தம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பன்முகத்தன்மை மற்றும் முயற்சிகளை மேற்கொள்வது இந்துக்கள் என்றார்.

இந்துத்துவாவின் சித்தாந்தம் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. மக்களிடையே ஒற்றுமையை நம்புகிறது. இந்துத்துவா என்பது உலகம் முழுவதிலும் உள்ள கருத்து வேறுபாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நம்புகிறது. இதுதான் உண்மை, இதை உறுதியாகப் பேச வேண்டும். அதன் அடிப்படையில் நாம் ஒற்றுமையாக இருக்க முடியும். மக்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவருவதுதான் ஸ்வயம் சேவக் சங்கத்தின் பணி என்று கூறினார்.

அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான், அவர்களுக்கு பொதுவான மூதாதையர்கள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். பன்முகத்தன்மை இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று தான். மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக்கூடாது என்றார்.

அனைத்து மத நம்பிக்கைகளையும் அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்றுநோயை ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து போராடியது. நமது கலாச்சாரம் நம்மை இணைக்கிறது. நாம் நமக்குள் எவ்வளவு சண்டையிட்டாலும் பரவாயில்லை. நெருக்கடிகளில் ஒன்றுபடுவோம் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: கேரளாவில் ஆளுநர் மாளிகை முற்றுகை - பங்கேற்ற திருச்சி சிவா

அம்பிகாபூர்: நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்து என்றும் அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான் எனவும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். வழிபாட்டு முறைகளை யாரும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் உறுதிபடக் கூறினார். செவ்வாயன்று (நவ. 15) சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் சுயம் சேவகர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வேற்றுமையில் ஒற்றுமையை இந்தியாவின் பழமையான அம்சம்.

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்பதை 1925ஆம் ஆண்டு முதல் தாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம். இந்தியாவை தங்கள் தாய் பூமி என்று கருதுபவர்கள் மற்றும் ஒற்றுமை கலாச்சாரத்துடன் வாழ விரும்புபவர்கள். மதம், ஜாதி, மொழி மற்றும் உணவுப் பழக்கம், சித்தாந்தம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பன்முகத்தன்மை மற்றும் முயற்சிகளை மேற்கொள்வது இந்துக்கள் என்றார்.

இந்துத்துவாவின் சித்தாந்தம் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. மக்களிடையே ஒற்றுமையை நம்புகிறது. இந்துத்துவா என்பது உலகம் முழுவதிலும் உள்ள கருத்து வேறுபாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நம்புகிறது. இதுதான் உண்மை, இதை உறுதியாகப் பேச வேண்டும். அதன் அடிப்படையில் நாம் ஒற்றுமையாக இருக்க முடியும். மக்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவருவதுதான் ஸ்வயம் சேவக் சங்கத்தின் பணி என்று கூறினார்.

அனைத்து இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான், அவர்களுக்கு பொதுவான மூதாதையர்கள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். பன்முகத்தன்மை இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று தான். மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக்கூடாது என்றார்.

அனைத்து மத நம்பிக்கைகளையும் அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்றுநோயை ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து போராடியது. நமது கலாச்சாரம் நம்மை இணைக்கிறது. நாம் நமக்குள் எவ்வளவு சண்டையிட்டாலும் பரவாயில்லை. நெருக்கடிகளில் ஒன்றுபடுவோம் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: கேரளாவில் ஆளுநர் மாளிகை முற்றுகை - பங்கேற்ற திருச்சி சிவா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.