ETV Bharat / bharat

நத்தை வேகத்தில் நகரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களில் சராசரியாக 415 பேர் கொல்லப்படுகிறார்கள். அதைப் போல, ஆண்டு ஒன்றுக்கு விபத்துக்களில் சிக்கி கைகால் இழந்து முடமாகுபவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தைத் தாண்டும். உலகத்தில் உள்ள மோட்டார் வாகனங்களில் ஒரு விழுக்காடு தான் இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால் உலகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் ஆறு விழுக்காடு இந்தியாவில் நிகழ்கின்றன.

author img

By

Published : Feb 16, 2021, 5:45 PM IST

Road safety remains a pipe dream
Road safety remains a pipe dream

நம்மில் பலர் பயணத்தை மிகவும் விரும்புகிறோம்; ரசிக்கிறோம். பயணங்கள் நம் மனதினை மாற்றும், நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தொடங்கும் ஒவ்வொரு பயணமும் அதன் இலக்கை நாம் எண்ணிய வழியில் அடைவதையே விரும்புகிறோம். அந்த எண்ணத்திலேயே பயணத்தையும் தொடங்குகிறோம். ஆனால் அதுபோன்ற ஒரு பயணத்தில் வாழ்க்கை என்னும் பயணமே முடிந்து விடுவதை விட மாபெரும் கொடுமை வேறு உண்டா? சாலைப் பாதுகாப்பு என்பது இந்த நாட்டில் ஒரு மாயமானைப் போல ஆகிவிட்டது. சாலை விபத்து லட்சக் கணக்கான குடும்பங்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் போக்கின் தொடர்ச்சியாக, சமீபத்தில் விசாகப்பட்டினத்துக்கு அருகில், பேருந்து ஒன்று ஓர் ஆபத்தான வளைவைக் கடக்கும் போது 200 அடி ஆழத்தில் விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஆந்திராவின் அரக்குப்பள்ளத்தாக்குச் சுற்றுலா தலத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். அந்த விபத்தைத் தொடர்ந்து அதே ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மாதம் கர்நாடகத்தில் ஒரு சாலை விபத்தில் 13 இளம்பெண்கள் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 15 கூலித் தொழிலாளர்கள் வேகவேகமாக வந்த ஒரு மோட்டார் வண்டியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கின்றனர். இந்தக் கொடூர விபத்தின் அதிர்ச்சியிலிருந்து தேசம் மீள்வதற்கு முன்னமே, மேற்கு வங்காளத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் 14 பேர் பலியாகி விட்டனர். இந்த மாதிரியான சாலை விபத்துகளின் பட்டியல் அனுமன் வால் போல நீண்டு கொண்டே இருக்கிறது.

தேசத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களில் சராசரியாக 415 பேர் கொல்லப்படுகிறார்கள். அதைப் போல, விபத்துக்களில் சிக்கி கைகால் இழந்து முடமாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு மூன்றரை லட்சத்தைத் தாண்டும். உலகத்தில் உள்ள மோட்டார் வாகனங்களில் ஒரு விழுக்காடு தான் இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால் உலகத்தில் நடக்கும் மொத்த சாலை விபத்துக்களில் ஆறு விழுக்காடு இந்தியாவில் நிகழ்கின்றன.

சாலை விபத்துக்களைப் பொறுத்த வரையில் இந்தியாவும் ஜப்பானும் ஒரே நிலையில் தான் இருக்கின்றன. என்றாலும், ஜப்பானில் வருடத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் குறைவான மக்களே சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள். மாறாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டுகின்றன.

நம்மிடம் சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கும் பழக்கம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்தக் காலக்கட்டத்திற்குள் சாலை விபத்துப் பலிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்திருக்கிறது. அதனால் மக்களின் உயிர் வாழும் உரிமை பெரும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. கரோனா என்னும் தொற்று நோயை விட அதிகமான ஆபத்தைக் கொண்டதாக சாலை விபத்துகளை மத்திய அரசு பார்க்கிறது. ஆனால் இந்த அபாயகரமான பிரச்னையைத் தீர்ப்பதற்கு அது சரியான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு எடுத்திருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை 2011-2020 காலக்கட்டத்தை சாலை விபத்துக்களுக்கு எதிராகச் செயல்படும் தசாப்தம் என்று அறிவித்திருந்தது. இந்தக் காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்களையாவது சாலை விபத்துக்களில் உயிரிழப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்பது அந்த அறிவிப்பின் நோக்கமாக இருந்தது. 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து பலிகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்னும் இலக்கையும் நிர்ணயித்திருந்தது. ஆனால் இந்த லட்சியமும், இலக்கும் காற்றில் கரைந்து போயின. இந்தக் காலக்கட்டத்தில் தான் 13 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிர் இழந்தனர். 50 லட்சம் பேர் முடமாகி வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர்.

இந்த உயிரிழப்புகளில் 61 விழுக்காட்டிற்கும் மேல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தான் நிகழ்கின்றன. அந்த நெடுஞ்சாலைகள் தேசத்தில் இருக்கும் மொத்த சாலை கட்டமைப்பில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான இடத்தைப் பிடிக்கின்றன. விபத்துகளில் இறந்து போகின்றவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் 18 - 45 வயதைச் சேர்ந்தவர்கள்.

இந்திய சாலை விபத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மதிப்பிட உலக வங்கி ஓர் ஆய்வை நடத்தியது. அதில், மொத்தம் 75 விழுக்காடு ஏழைக் குடும்பங்கள் சாலை விபத்துக்களால் கடுமையான வருமான இழப்பிற்கு ஆளாகியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஏழு லட்சம் கோடி இழப்பை இந்தச் சாலை விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. அதனால் இனியும் சாலை விபத்தை மிகவும் சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.

தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல், விழிப்புணர்வு உண்டாக்குதல், சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப் படுத்துதல், அவசரகால நடவடிக்கைகள் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாவிடின், இந்தப் பிரச்னைக்குத் தெளிவான தீர்வுகளையும், நல்ல பலன்களையும் நம்மால் அடையவே முடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அதிகப்படியான வாகன வேகம் என்பது தான் பிரச்னையின் ஆணிவேர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதால், ஓட்டுநர்களுக்கு மத்தியில் ஒரு விஞ்ஞான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அபாயகரமான சாலை வளைவுகளைச் சரிசெய்ய வேண்டும். அதைப்போலவே தேவையான மற்ற நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் இருக்கும் மதுபானக் கடைகளை மூடுவதும் அதிமுக்கியமான நடவடிக்கையாகும்.

அரசும் மக்களும் இணைந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் தான் சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்பாக மாறும். அப்போது தான் பாதுகாப்பான பயணம் என்பது சாத்தியமாகும். விபத்தற்ற சாலை என்னும் லட்சியமும் பூர்த்தியாகும்.

நம்மில் பலர் பயணத்தை மிகவும் விரும்புகிறோம்; ரசிக்கிறோம். பயணங்கள் நம் மனதினை மாற்றும், நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தொடங்கும் ஒவ்வொரு பயணமும் அதன் இலக்கை நாம் எண்ணிய வழியில் அடைவதையே விரும்புகிறோம். அந்த எண்ணத்திலேயே பயணத்தையும் தொடங்குகிறோம். ஆனால் அதுபோன்ற ஒரு பயணத்தில் வாழ்க்கை என்னும் பயணமே முடிந்து விடுவதை விட மாபெரும் கொடுமை வேறு உண்டா? சாலைப் பாதுகாப்பு என்பது இந்த நாட்டில் ஒரு மாயமானைப் போல ஆகிவிட்டது. சாலை விபத்து லட்சக் கணக்கான குடும்பங்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் போக்கின் தொடர்ச்சியாக, சமீபத்தில் விசாகப்பட்டினத்துக்கு அருகில், பேருந்து ஒன்று ஓர் ஆபத்தான வளைவைக் கடக்கும் போது 200 அடி ஆழத்தில் விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஆந்திராவின் அரக்குப்பள்ளத்தாக்குச் சுற்றுலா தலத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். அந்த விபத்தைத் தொடர்ந்து அதே ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மாதம் கர்நாடகத்தில் ஒரு சாலை விபத்தில் 13 இளம்பெண்கள் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 15 கூலித் தொழிலாளர்கள் வேகவேகமாக வந்த ஒரு மோட்டார் வண்டியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கின்றனர். இந்தக் கொடூர விபத்தின் அதிர்ச்சியிலிருந்து தேசம் மீள்வதற்கு முன்னமே, மேற்கு வங்காளத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் 14 பேர் பலியாகி விட்டனர். இந்த மாதிரியான சாலை விபத்துகளின் பட்டியல் அனுமன் வால் போல நீண்டு கொண்டே இருக்கிறது.

தேசத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களில் சராசரியாக 415 பேர் கொல்லப்படுகிறார்கள். அதைப் போல, விபத்துக்களில் சிக்கி கைகால் இழந்து முடமாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு மூன்றரை லட்சத்தைத் தாண்டும். உலகத்தில் உள்ள மோட்டார் வாகனங்களில் ஒரு விழுக்காடு தான் இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால் உலகத்தில் நடக்கும் மொத்த சாலை விபத்துக்களில் ஆறு விழுக்காடு இந்தியாவில் நிகழ்கின்றன.

சாலை விபத்துக்களைப் பொறுத்த வரையில் இந்தியாவும் ஜப்பானும் ஒரே நிலையில் தான் இருக்கின்றன. என்றாலும், ஜப்பானில் வருடத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் குறைவான மக்களே சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள். மாறாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டுகின்றன.

நம்மிடம் சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கும் பழக்கம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்தக் காலக்கட்டத்திற்குள் சாலை விபத்துப் பலிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்திருக்கிறது. அதனால் மக்களின் உயிர் வாழும் உரிமை பெரும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. கரோனா என்னும் தொற்று நோயை விட அதிகமான ஆபத்தைக் கொண்டதாக சாலை விபத்துகளை மத்திய அரசு பார்க்கிறது. ஆனால் இந்த அபாயகரமான பிரச்னையைத் தீர்ப்பதற்கு அது சரியான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு எடுத்திருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை 2011-2020 காலக்கட்டத்தை சாலை விபத்துக்களுக்கு எதிராகச் செயல்படும் தசாப்தம் என்று அறிவித்திருந்தது. இந்தக் காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்களையாவது சாலை விபத்துக்களில் உயிரிழப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்பது அந்த அறிவிப்பின் நோக்கமாக இருந்தது. 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து பலிகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்னும் இலக்கையும் நிர்ணயித்திருந்தது. ஆனால் இந்த லட்சியமும், இலக்கும் காற்றில் கரைந்து போயின. இந்தக் காலக்கட்டத்தில் தான் 13 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிர் இழந்தனர். 50 லட்சம் பேர் முடமாகி வாழ்வதற்கே சிரமப்படுகின்றனர்.

இந்த உயிரிழப்புகளில் 61 விழுக்காட்டிற்கும் மேல் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தான் நிகழ்கின்றன. அந்த நெடுஞ்சாலைகள் தேசத்தில் இருக்கும் மொத்த சாலை கட்டமைப்பில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான இடத்தைப் பிடிக்கின்றன. விபத்துகளில் இறந்து போகின்றவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் 18 - 45 வயதைச் சேர்ந்தவர்கள்.

இந்திய சாலை விபத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மதிப்பிட உலக வங்கி ஓர் ஆய்வை நடத்தியது. அதில், மொத்தம் 75 விழுக்காடு ஏழைக் குடும்பங்கள் சாலை விபத்துக்களால் கடுமையான வருமான இழப்பிற்கு ஆளாகியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஏழு லட்சம் கோடி இழப்பை இந்தச் சாலை விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. அதனால் இனியும் சாலை விபத்தை மிகவும் சாதாரண ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.

தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல், விழிப்புணர்வு உண்டாக்குதல், சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப் படுத்துதல், அவசரகால நடவடிக்கைகள் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாவிடின், இந்தப் பிரச்னைக்குத் தெளிவான தீர்வுகளையும், நல்ல பலன்களையும் நம்மால் அடையவே முடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அதிகப்படியான வாகன வேகம் என்பது தான் பிரச்னையின் ஆணிவேர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதால், ஓட்டுநர்களுக்கு மத்தியில் ஒரு விஞ்ஞான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அபாயகரமான சாலை வளைவுகளைச் சரிசெய்ய வேண்டும். அதைப்போலவே தேவையான மற்ற நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் இருக்கும் மதுபானக் கடைகளை மூடுவதும் அதிமுக்கியமான நடவடிக்கையாகும்.

அரசும் மக்களும் இணைந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் தான் சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்பாக மாறும். அப்போது தான் பாதுகாப்பான பயணம் என்பது சாத்தியமாகும். விபத்தற்ற சாலை என்னும் லட்சியமும் பூர்த்தியாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.